August 2015

குறைந்த லாபம்.. அதிக விற்பனை..

30ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், ஒரு கடையை நிறுவும் நிறுவனம் அந்தக் கடையை நிர்வகிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும். கிளைகளை தொடங்குவது பற்றியோ, வர்த்தகத்தை விரிவு படுத்துவது பற்றியோ யோசிக்காது. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி அப்போது இல்லாததும் ஒரு காரணமாகும்.  

தற்போது நிலைமை மாறிவிட்டது. வர்த்தகர்களும், தொழிலதிபர்களும்  தொழில் நுணுக்கங்கள் குறித்த தகவல்களை விரல் அசைவில் வைத்திருக்கிறார்கள். ரெயிலில் செல்லும் போதும்,
விமானத்தில் செல்லும் போதும், பஸ்சில் செல்லும் போதும் கூட அவர்களால் ஒரு போனையோ அல்லது ஒரு லேப்டாப்பையோ வைத்துக் கொண்டு இருந்த இடத்தில் பிசினஸ் மேற்கொள்ள முடிகிறது.  

அனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது?

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்
என்றார் வள்ளுவர்.
விருப்பப்பட்டதை  வாழ்க்கையில் அடைவதுதான் வெற்றியாகும்.

நல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு

குறிப்பிட்ட ஒருவரை சந்திக்கவோ அல்லது வரவேற்கவோ செல்லும் போது வெறுங்கையுடன் செல்வதைக் காட்டிலும் ஏதேனும் ஒன்றைக் கையில் கொண்டு சென்று தருவது மரபாக இருந்து வருகிறது. இது அனைத்துத் தரப்பிலும் பொதுவான மரபாக இருந்து வருகிறது.  
முக்கியப் பிரமுகர்கள், பிரபலமானவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவும், வரவேற்கவும் மலர் மாலைகள், சந்தன மாலைகள், சால்வைகள், பரிசுப்பொருட்கள், பூங்கொத்துகள் உள்ளிட்டவற்றை வழங்கி கவுரவிப்பது வழக்கம். புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்படுவது உண்டு.

மாற்றங்களை ஏற்று செயல்படும் நிறுவனம் வெற்றிக்கொடி கட்டும்...

அறிவியல் வளர்ச்சி காரணமாக புதிய தொழில் நுட்பங்களும், புதிய மாற்றங்களும் அதிகரித்து வருகின்றன. தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர் கள் இது போன்ற புதிய மாற்றங்களை மனமுவந்து ஏற்று செயல்படுத்த வேண்டும்.

விவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன?

இந்தியா ஒரு விவசாய நாடு. அதனால்தான் விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்று காந்தியடிகள் கூறினார். ஆனால் தற்போது விவசாயத்துறை வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளது.
வறட்சி, வெள்ளம், வசதியின்மை, பணியாள் பற்றாக்குறை, உரிய விலை கிடைக்காமை, அரசால் நிலம் கையகப்படுத்துதல், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு நிலம் விற்பனை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வேலை கிடைக்காததால் விவசாய தொழிலாளர்களும், சிறு குறு விவசாயிகளும் விவசாய பணிகளுக்கு முழுக்கு போட்டு விட்டு வேறு தொழிலைத் தேடி நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர்.

மாற்றம் காண மனோபாவத்தை மாற்று...

மனிதன் தனது மாபெரும் அறிவாற்றலைக் கொண்டு எவ்வளவோ நவீனங்களை உருவாக்கி விட்டான். இன்னும் சில வருடங்களில் செவ்வாய் கிரகத்துக்கு சுற்றுலாப் பயணம் செய்யும் அளவுக்கு மனிதன் முன்னேறி விட்டான். வளர்ச்சி .... வளர்ச்சி.... என்று மனிதன் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறான். ஆனால் மகிழ்ச்சியைத்தான் தொலைத்து விட்டான். திருப்தி கொள்ளும் மனப்பான்மையை பெரும்பாலும் இழந்து விட்டான் என்றே சொல்லலாம்.

 

ரியல் எஸ்டேட் துறை முதலீடுகளை ஈர்ப்பதில் 700 சதவீத வளர்ச்சி... குஜராத் மாநிலம் சாதனை!

இந்திய அளவில் ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் கடந்த ஆண்டை விட மிகவும் குறைந்துள்ளதாக அசோசேம் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரியல் எஸ்டேட் துறையில் 55% முதலீடு குறைந்திருக்கிறது என அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் வரை ரியல் எஸ்டேட் துறை ரு.92,600 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ரியல் எஸ்டேட் துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் சரிவை கண்டுள்ளபோதிலும், குஜராத் மாநிலம் மட்டும் 700 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது.

தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் ‘பிசினஸ் ஹெல்த் ஸ்கேன்’

நிறுவனங்களின் செயல்பாட்டை கண்டறிய உதவும் பிசினஸ் ஹெல்த் ஸ்கேன் எனப்படும் புதிய நிர்வாக வழிமுறையை லீட்ஹை பிசினஸ் கன்சல்டன்சி என்ற நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந் நிறுவனத்தின்  நிர்வாக இயக்குனராக இருப்பவர்  தீனதயாளன். இவர் பிசினஸ்ஹெல்த் ஸ்கேன் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அது குறித்து பார்ப்போம்..
 ஒரு பொருள் உருவாவதற்கும், வடிவமைப்பு பெறுவதற்கும்  பிசினஸ் மாடல் மிக முக்கியமானதாகும். வணிகத்தில் வளர்ச்சி என்பது ஒரு நிலையில் இருந்து மேம்பட்ட இன்னொரு நிலையை அடைவதுதான்.

‘தமிழன் வங்கி’ உருவாகுமா?

தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் எவ்வளவோ சிறம்பம்சங்கள் உண்டு. சங்க காலத்திலேயே தமிழர்கள் கடல்கடந்து வணிகம் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த தமிழர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ‘தமிழன் வங்கி’ உருவாக வேண்டும் என்பது தமிழ் வர்த்தக சங்கத்தின் நோக்கமாகும். இதற்காக இச்சங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

இச்சங்கம் நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1944ம் ஆண்டு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் சண்முகம் செட்டியார்  இச்சங்கத்தை தொடங்கி வைத்தார்.

Pages