June 2015

தொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்

தொழில் துறையில் புதிதாக கால்வைப்பவர்கள் எந்தத் தொழிலில் இறங்கு கின்றனரோ அத்தொழில் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.

அடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சரக்கு வாகன துறைக்கு முக்கிய பங்குண்டு. சரக்கு வாகன துறையில் அதிகம் ஈடுபடுவது கனரக வாகனங்களே. அதாவது லாரிகள். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பழமொழி. அதைப் போல சரக்குப் போக்கு வரத்து தங்குதடையின்றி நிகழ்ந்தால்தான் நாட்டில் அத்தியாவசிய பணிகள் சரியாக நடக்கும்.

வணிகர்களை அச்சுறுத்தும் உணவுப் பாதுகாப்புச் சட்டம்

அறிவியல் அடிப்படையில் உணவுப்பொருள்களை பாதுகாப்பதற்கும், உணவுப் பொருள்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை  இறக்குமதியை ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றிற்காகவும்   ஏற்படுத்தப்பட்டதுதான் ‘உணவுப் பாதுகாப்புச் சட்டம்‘ .

இந்தச் சட்டத்தின் நோக்கம் உயர்ந்தது என்று கூறப்பட்டாலும் இச்சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் நுகர்வோரையும், சிறு வணிகர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளதாக வணிகர்கள் கூறுகின்றனர்.
உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள், தற்காலிக கடைக்காரர்கள், தெருவில் கூவி விற்பனை செய்பவர்கள் கூட பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

செலவுக்கேற்ற உற்பத்தி இல்லாத விவசாயம்.

இந்தியாவில் நகரமயமாகும் போக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பு 14.5% ஆக உள்ளது. கடந்த ஆண்டு விவசாயத் துறையின் ஏற்றுமதி பங்களிப்பு 10.5% ஆகும்.

60 வருடங்களுக்கு மேலாக 50% பேரின் வாழ்வாதாரமாக விவசாயத்துறை இருந்து வருகிறது. தொழில் வளர்ச்சியிலும் விவசாயத் துறைக்கு முக்கிய பங்குண்டு. ஏனெனில் தொழில்களுக்கு தேவையான பல மூலப்பொருட்கள் விவசாயத் துறையிடம் இருந்துதான் கிடைக்கின்றன.

விரைவில் சோலார் கிரைண்டர்கள்! அசத்தும் சௌபாக்யா நிறுவனம்

மொத்த கிரைண்டர் மார்க் கெட்டில் 37 சதவீதத்தை சௌபாக்யா கிரைண்டர்ஸ் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. சமையலறைக்குத் தேவையான பல பொருட்களை இந்நிறுவனம்  தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்

வங்கிக் கணக்குகள், காப்பீட்டுத் திட்டங்கள், அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் உள்ளிட்ட வற்றில் முதலீட்டாளர்களின் பணம் ரூ.22 ஆயிரம் கோடி முடங்கியுள்ளது என்கிற செய்தி யாரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கும்.

மின்னல் வேகத்தில் பணிகளை தொடங்கிய தமிழக முதல்வர்

ஏழு மாதங்களுக்குப்பிறகு  ஜெயலலிதா மீண்டும் 5–வது முறையாக முதல் அமைச்சராக பதவி ஏற்றதை தமிழக மக்கள் ஒரு திருவிழா போலவே கொண்டாடினார்கள். கடந்த 7 மாதங்களாக ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடுதான் தமிழக அரசு இயங்கினாலும் மக்கள், அம்மா இல்லையே என்று எதிர்பார்த்ததை காண முடிந்தது.
 

சில குறைகள் இருந்தாலும், கடந்த நான்காண்டு கால அதிமுக ஆட்சி மிகச் சிறப்பாகவே செயல்பட்டது. அதனால்தான் சென்ற ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 44 சதவீத வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றியை அடைந்தது.

பசுமைப் பொருளாதாரம்

பொருளாதார திட்டங்கள் நமது சுற்றுச்சூழலை பேணிக் காப்பதாகவும், பூமியின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதகவும் இருக்கவேண்டும். இவற்றின் அடிப்படையில் அமையும் பொருளாதாரம் தான் ‘பசுமைப் பொருளாதாரம்’.

இது ஏதோ நான்கு சுவர்களுக்குள் சிலர் உருவாக்கும் திட்டங்கள் அல்ல.. இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உளப்பூர்வமாக இணைந்து செயலாற்ற வேண்டிய திட்டங்கள்.எந்தெந்தத் துறைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று யுனைடெட் நேஷன்ஸ் 10 துறைகளைக் குறிப்பிடுகிறது:

                                                              கட்டுமான துறை

அதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி

இன்றைய காலகட்டத்தில் விரைந்து செயல்பட வேண்டிய பணிகளுக்கு அவுட்சோர்சிங் பணியினை பலர் நாடுகின்றனர். இந்த பணிக்காக கேட்கப்படும் சேவை கட்டணத்தை தருவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராகவே உள்ளனர். அவர்கள் எதிர்பார்ப்ப தெல்லாம் சிறந்த சேவையே.

ஒரு நிறுவனத்திற்கு தேவையான ஆய்வறிக்கையை 100 சதவீதம் உண்மையுடன் வழங்கப்படும் குறிப்பே அவுட்சோர்சிங் பணியாகும். இந்த அவுட்சோர்சிங் பணிக்கு நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். வாடிக்கையாளர்களை பிடிப்பதற்கு முன்பே சிறிய வேலைகளில் கூட முழுத்தகவலுடன் ஆய்வறிக்கையை வழங்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் நன்மதிப்பு கிடைக்கும்.

குறைந்து வரும் காகிதபண பயன்பாடு

மனிதன் தனது சக மனிதனுக்கு கொடுக்கும் மதிப்பை விட, பணத்துக்கு அதிக மதிப்பு கொடுக்கிறான். இதற்குக் காரணம் பணத்தின் சக்தி. ஒருவன் எவ்வளவு சம்பாதித்திருக்கிறான் என்பதைக் கொண்டே சமூகம் அவனை மதிப்பிடுகிறது.

 இந்தப் பணம் உருவான கதை மிக நீண்டது. பண்டமாற்று முறை தொடங்கி காகிதப் பணம் பயன்பாட்டுக்கு வந்த விதம் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது.

Pages