Sep 2015

பழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை! விரைவில் அமுலாகும் புதிய திட்டம்

இந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு அரசுக்கும், மக்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது. வாகனங்களில் இருந்து வெளி வரும் புகை ஏற்படுத்தும் மாசின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

பெருநகரங்களில் வாகன எண்ணிக்கை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதாரணத்திற்கு சென்னை நகரத்தை எடுத்துக்கொள்வோம். நாள் ஒன்றுக்கு 1000 புதிய வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழைகின்றன.

சாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்!- சிறப்பு கட்டுரை

பில்கேட்ஸ்... இந்தப் பெயரை உச்சரிக்காத மனிதர்களே உலகத்தில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு செல்வாக்கு படைத்தவர். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து  உலகின் நம்பர் 1 பணக்காரராக உயர்ந்தவர்.  பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே முதல் நிலை பணக்காரராக உயர முடியும் என்ற எண்ணத்தை உடைத்தெரிந்த மாபெரும் மனிதர் இவர்.   

தொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’

கல்லாத பேரை எல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில்தான் இன்பம் என் தோழா....

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த பாடலை எழுதிய காலகட்டத்தில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் மிகவும்குறைவாக  இருந்தது. அதேபோல் தொழிற்கல்வி கற்றவர்களின் சதவீதமும் மிக்குறைவாக இருந்தது. ஆனால் இன்றைக்கு ஓரளவு நிலைமை மாறியிருக்கிறது. இம்மாற்றத்துக்கு காரணம் அவரைப் போன்ற சமூக ஆர்வலர்களும், சமூக சிந்தனையாளர்களும், மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான்.

கணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்

பொருட்களை பேக்கிங் செய்யும் போது பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று கிளிப்பு ஆகும். இதை தயாரித்து விற்பனை செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். மாதம் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும்.

 இந்த கிளிப்புகளை தயாரிப்பதற்கு பிரத்யேக இயந்திரங்கள் உள்ளன. தரமான நிறுவனத்தின் இயந்திரத்தை தொழில் ஆலோசர்களிடம் கேட்டு வாங்க வேண்டும்.
தரமான இயந்திரத்தை வாங்கி, கிளிப்புகள் தயாரிக்கும் தொழிலை புதிய தொழில் முனைவோர்கள் மேற்கொள்ளலாம்.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா? தொழிலாளர் சட்ட திருத்த மசோதா

மத்திய அரசு கொண்டு வர உள்ள, தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவிற்கு தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மத்தியில்,  அதிருப்பதி நிலவிக்கொண்டிருகிறது  என்பதை ஆங்காங்கே நடைபெறும் அவர்களின் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் இந்த திருத்த மசோதாவை கடுமையாக  எதிர்த்து வருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் சம்மேளனங்களும்,  சிலமாநில கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், அறிக்கைகள், பேட்டிகள் இவற்றின் வாயிலாக பதிவு செய்து வருகின்றன.  இந்த தொழிலாளர் சட்டதிருத்தத்தை எதிர்ப்பதற்கு காரணம் என்ன  என்ன என்பது குறித்து பார்ப்போம்.

குறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய நிதிச்சட்டத்தின் திருத்த வரைவில், ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கான வரைவுகள் உள்ளன.  இது வங்கிப்பணியாளர்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்ட காரணம் என்ன?

தொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்

நான் ஓவன் எனப்படும் துணிவடிவிலான காகிதங்களின் பயன்பாடு இன்றைக்கு பரவலாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இது வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது என்பதை உணர்ந்த பல்வேறு நாடுகள்,  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கி வருகின்றன. சில நாடுகள் முற்றிலுமாக தடையும் விதித்து விட்டன.  தமிழகத்தில் கூட குறிப்பிட்ட மைக்ரான் அளவு வரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தைகைய காரணங்களால்  நான் ஓவன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

பேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்

பலரும் பேரிச்சை என்பது  ஒரு பாலைவன பயிர் என்றே கருதிக்கொண்டிருக்கிறார்கள். அது முழுமையான உண்மை அல்ல. இந்தியாவிலும் பேரிச்சை குறிப்பிட்ட அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.  குறிப்பாக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் ஏராளமான விவசாயிகளால்  பயிரிடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் சில விவசாயிகளால் பேரிச்சை பயிரிடப்பட்டு வருகிறது. உரிய முறையில் பேரிச்சையை பயிரிட்டு சாகுபடி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு!

செப்டம்பர் மாதத்தில் நடைபெறும், உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த மாநாட்டிற்கு வருகை தரும் முதலீட்டாளர்களில் பலர்   நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்குவதற்கு ஆர்வமாக உள்ளனர்.

நேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி

இந்தியர்கள் ‘பஞ்சுவாலிட்டி’யை கடைப் பிடிக்காதவர்கள் என்று வெளிநாட்டினர் பொதுவாக சொல்வார்கள். இந்தி யாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருப்பவர்கள் கூட நேரத்தை முறையாக கடைப்பிடிப்பதில்லை என்றும், எதிலும் தாமதமாகவே செயல்படுகிறார்கள் என்றும் வெளிநாட்டுக்காரர்கள் கூறுகிறார்கள். குறித்த நேரத்தில் செயல்படாமல் தாமதமாக செயல்படுதல் என்பது நமது மக்களுக்கு ரத்தத்தில் ஊறிப் போன விஷயமாக இருக்கிறது.

 ஜப்பானில் புல்லட் ரயில் 10 மணி, 15 நிமிடம், 20 நொடி என்று நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அந்த நொடியில் ரயில் வந்து நிற்கும். 1 நொடி தாமதமானால் கூட ரயிலைப் பயணிகள் பிடிக்க முடியாது.

Pages