Sep 2015

தொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாததன் காரணமாக வாழ்நாள் முழுவதும் சம்பளத்திற்கு பணி செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

இன்னும் சிலருக்கு முறையான திட்டங்கள் இருக்கும். ஆனால் பணம் இருக்காது. நம்மை நம்பி யார் பணம் தரப்போகிறார்கள் என்று எண்ணி திட்டத்தையே கைவிடுபவர்கள் பலர். இவர்களுக்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கமாக இருப்பதுதான் அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமாகும்.

கடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா?

கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு இதுவரை இல்லாத அளவிற்கு இருக்கிறது. இது சாமானிய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
பாசிப்பருப்பை விட எப்போதும் குறைவான விலைக்கு விற்பனையாகும் துவரம்பருப்பு விலையோ இன்றைக்கு கிலோ ரூ.130ஐ தொட்டு இருக்கிறது.  6 மாதங்களுக்கு முன்பு இதன் விலை ரூ.70ஆக இருந்தது. ஆக சுமார் 90 சதவீத விலை உயர்வை துவரம்பருப்பு அடைந்துள்ளது.

சிலிண்டர் மானியம் வங்கியில் செலுத்தப்படுவதால் ஆண்டுக்கு ரூ 15 ஆயிரம் கோடி மிச்சம்!

சிலிண்டர் மீதான மானியத்தை வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்த தொடங்கியபோது, பல்வேறு தரப்பினர் விமர்சனம்  செய்தனர். இத்திட்டத்தை நிறைவேற்றினால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும் என்றும், இதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியாது என்றும் சொல்லப்பட்டன.

பொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்?

ஒரு நாட்டின் பலம் என்பது அந்நாட்டின் பொருளாதார பலத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. பொருளாதார பலத்தைப் பொறுத்த வரை சில நாடுகள்தான் முன்னணியில் இருக்கின்றன.
பல நாடுகள் பின்தங்கியே இருக்கின்றன. உலகில் மூன்று வகையான பொருளாதார தத்துவங்கள் நடைமுறையில் உள்ளன.  அவை, பொதுவுடமைப் பொருளாதாரம், முதலாளித்துவ
பொருளாதாரம், கலப்புப் பொருளாதாரம் ஆகியவையாகும்.  இன்றைக்கு பெரும் பாலான நாடுகளில் முதலாளித்துவ பொருளாதார கோட்பாடுதான் பின்பற்றப்படுகிறது.

பொருளாதாரம் வளர்வதற்கான ஆய்வுகள் தேவை..

இன்றைய கால சூழலில் முனைவர் பட்டம் (பி.எச்டி) பெறுவதற்காக பலரும் தேர்ந்தெடுக்கும் தலைப்பு இலக்கியம் சார்ந்ததாகவே இருக்கிறது. இலக்கிய வகைகளான கதை, கவிதை, சிறுகதை, நாவல் போன்றவை மக்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்கும், அறிவை விருத்தி செய்து கொள்வதற்கும் தேவைதான் என்றாலும், முனைவர் பட்டம் பெற நினைப்பவர்கள் அதை
ஆய்வு செய்வதால் சமுதாயத்திற்கு பெரும் பலன் ஒன்றும் கிட்டப்போவதில்லை.

உயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...

உலக வர்த்தக அமைப்பின் சார்பில், சேவைக்கான பொது ஒப்பந்தத்தின்படி உயர் கல்வியில் வெளிநாட்டு கல்வி  நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உலக வர்த்த அமைப்பின் மாநாட்டில் ஒப்பந்தமாக நிறைவேற உள்ளது.

எனவேதான்  மத்தியஅரசு உயர்கல்வி துறையில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களையும், பல்கலைக்கழகங்களையும் அனுமதிக்க தீர்மானித்து,  இதற்கான வழிமுறைகளை வகுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.  மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெண் ஊழியர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் விநியோகம்.. ஐபிஎம் நிறுவனத்தின் புதுமைத்திட்டம்!

 முதன்மையான ஐ.டி.நிறுவனங்களில் ஐபிஎம்மும் ஒன்று. அமெரிக்க நிறுவனமான இந்நிறுவனம் இந்தியாவிலும்  முக்கிய நகரங்களில் கிளைகளை கொண்டுள்ளது.  இந்தியாவில் மட்டும் இந்நிறுவனத்தில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா?

இல்லம் இல்லாத ஏழைகளுக்கு, நிலம் வழங்கும் திட்டத்தை கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்திருந்தது. தற்போதைய பா.ஜ.க. அரசு அந்த திட்டத்திற்கு பதிலாக, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்து, அதற்கான வழிமுறைகளை வகுத்து வருகிறது.  2022 க்குள் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்பதில் மோடி தீவிரமாக உள்ளார்.

கலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு?

 கலப்பு பொருளாதார முறையிலிருந்து தாராளமய பொருளாதார முறைக்கு இந்தியா மாறி 23 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
1992ல் தாராளமயக் கொள்கை இந்தியாவில் நடைமுறைக்கு வந்தபோது பல பொருளாதார நிபுணர்களும், தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் அக்கொள்கையை வானளாவப் புகழ்ந்தார்கள்.  

Pages