Jan 2015

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களா?

இன்றைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. கிரெடிட் என்கிற இந்த கடன் அட்டையை பயன்படுத்துவதில் எச்சரிக்கை தேவை.
நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்வதுதான் கிரெடிட் கார்டின் அடிப்படை. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துவிட்டாலும் நம்மை கடனாளியாக்கிவிடும்.
எனவே கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் குறிப்பிட்ட சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பில்லிங் காலத்திற்குள் கடனை செலுத்தி விடுங்கள். ஏனெனில் பில்லிங் காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட்டால் வட்டி செலுத்த தேவையில்லை.

இயற்கை விவசாயத்தில் மகசூலை அதிகம் பெற முடியுமா?

இயற்கைப் விவசாயத்தை பின்பற்றுவோருக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதில்லை. குறைந்த தண்ணீரை கொண்டே விவசாயம் செய்ய முடியும் என்பது அதன் சிறப்பம்சங்களில் ஒன்று. இதனால் செலவு குறைகிறது.
உண்மை இவ்வாறு இருக்க உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு ஆதரவாக இருப்போர் இயற்கை விவசாயம் அதிக தண்ணீரை எடுத்துக்கொள்ளும் என்று பிரச்சாரம் செய்கின்றனர். மேலும் உற்பத்தியும் அதிகரிக்காது என்று கூறுகின்றனர். இந்த கூற்று முற்றிலும் தவறானது.

செய்யும் தொழிலை நேசிப்போம்...

‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். இந்த பழமொழியை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எந்தத் தொழிலைச் செய்தாலும், அதை நேசிக்க வேண்டும். உலகில் எந்த தொழிலும் தாழ்வான தொழில் அல்ல. தொழிலே செய்யாமல் சோம்பேறியாக சுற்றிக்கொண்டு இருப்பவன் தான் தாழ்வானவன்.
தொழில் செய்யாதவனை இந்த சமூகம் மதிப்பதில்லை. வேலை செய்பவர்களுக்குத் தான் சமூகம் மரியாதையை தருகிறது. அதிலும் அந்த தொழிலை நேசத்தோடு செய்பவர்களுக்கு கிடைக்கும் மரியாதை மிகவும் அதிகம்.
பகவத் கீதையில் கர்மயோகம் என்ற பகுதியில் கிருஷ்ணர் சொன்ன உபதேசம் மிகவும் புகழ் வாய்ந்தது.

மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதில் மக்களின் ஆர்வம் அதிகரிக்க காரணம் என்ன?

மியூச்சுவல் பண்டுகளில் செய்யப்படும் முதலீட்டு பணம் பெரும்பாலும் வங்கிப் பங்குகளிலேயே முதலீடு செய்யப்படுகிறது. தற்போது சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் பண்டுகள் முதலீடு செய்திருக்கின்றன.

பெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:

சமீப காலமாக பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள் பணிக்கு செல்வதன் முக்கிய நோக்கமே குடும்ப வருமானத்தை பெருக்கி கொள்வதற்குதான்.
கிராமபுறங்களில் பெண்கள் அதிக அளவில் விவசாய பணிகளுக்கும், கட்டிட பணிகளுக்கும் செல்கின்றனர். நகர்புறங்களில் அலுவல் சார்ந்த பணிகளுக்கு அதிக அளவில் பெண்கள் செல்கின்றனர். அதே சமயத்தில் சுயதொழில் முனைவோர்களை பொறுத்தவரை பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவுதான்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களின் பங்கை போலவே பெண்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கிறது.

Pages