Feb 2015

வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா?

அதிர்ஷ்டம் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்று பலரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கருத்து மிகவும் அபத்தமானது. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று ஒற்றை வரியில் சொல்லிவிடுகிறோம்.
அந்த வெற்றிக்கு பின்னால் எவ்வளவோ வலிகளும், வேதனைகளும் மறைந்து இருப்பதை உணர மறுக்கிறோம்.
‘நீ எந்த அளவிற்கு கடினமாக உழைக்கிறாயோ அந்த அளவிற்கு உனக்கு அதிர்ஷ்டம் உண்டு’ என்று கேரி பிளேயர் என்ற அறிஞர் சொல்லி இருக்கிறார்.

பட்ஜெட்டில் வரிச்சலுகை.. எதிர்பார்ப்பில் மக்களும்,நிறுவனங்களும்

2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு, வரி அடிப்படையிலான பயன்களை மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அன்னிய முதலீடுகளை கவரவும் மத்திய அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தீட்டி வருவது அறிந்ததே.
இந்நிலையில் இந்தியாவில் முதலீடு செய்யும் அன்னிய நிறுவனங்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் வரிச் சலுகைகள் வாரி வழங்கப்படலாம் என கணிக்கப்படுகிறது.
இந்தியாவில் புதிதாக துவங்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்ததர நிறுவனங்களுக்கு முதல் 3 வருடங்களுக்கு நேரடி வரி தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது.

பாரம்பரிய விதைகளை பாதுகாக்குமா அரசு?

மரபணு மாற்று விதைகளை (Genetically Modified Seeds) எதிர்ப்பது அறிவியலுக்கு எதிரானது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் கூறியிருந்ததோடு நெல், கோதுமை, மக்காச்சோளம், சோளம், கத்தரி, கடுகு, உருளைக்கிழங்கு, கரும்பு, கொண்டைக்கடலை போன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் கள ஆய்வுக்கும் அனுமதி அளிக்க மத்திய அரசு முனைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் பல மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக அரசும் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

மக்கள் நலன்

ஒரு முறை டெல்லி மாநிலத்தில் பாஜக ஆட்சி கவிழ்வதற்கு கடுமையான வெங்காய விலை உயர்வு காரணமாக அமைந்தது. அந்த நிகழ்வை பாஜக இன்னும் மறக்கவில்லை.
அதனால்தான், வெங்காய விலை உயரும்போதெல்லாம் அதனை கட்டுப்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளை தற்போதைய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் விலையை கட்டுப்பாட்டில் வைக்க 25 ஆயிரம் டன் வெங்காயம் மற்றும் 15 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு இவற்றை கொள்முதல் செய்ய தற்போது மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ரூ.50 கோடி சுழல் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இந்த நடவடிக்கையை பாஜக மேற்கொள்வதற்கு முக்கிய காரணம் என்ன? எல்லாம் தேர்தல்தான்!

20 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டுவது சாத்தியமா?

இந்தியா 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதற்கு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுவருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
பிரதமரின் இந்த இலக்கு குறித்து பல்வேறு துறையினரும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். தற்போதைய நிலையில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு சுமார் 2 டிரில்லியன் டாலர். இதை 20 டிரில்லியன் டாலராக உயர வேண்டுமெனில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். அத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் கூறியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

ரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்!

எப்படியாவது இந்திய வேளாண் சந்தையைக் கைப்பற்ற, அந்நிய விதை நிறுவனங்கள் துடிக்கின்றன. குறிப்பாக மான்சாண்டோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்கள் இந்தியாவில் தனது வர்த்தகத்தை உயர்த்துவதற்காக பல்வேறு தகிடுதத்த வேலைகளை செய்து வருகின்றன.
இந்நிறுவனங்களுக்கு ஆதரவாக அமெரிக்க அரசும் பல்வேறு அழுத்தங்களை இந்திய அரசுக்கு தருவதால் நமது அரசும் பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும்போக்கை கடைபிடித்து வருகிறது.

சம்பாதிப்பதை சேமிப்பதற்கான வழிமுறைகள்!

வரவு எட்டணா.. செலவு பத்தணா.. என்று கண்ணதாசன் 50 ஆண்டுகளுக்கு முன்னரே பாடி சென்று விட்டார். பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட்ட இன்றைய கால கட்டத்திலும் அதே நிலமைதான் இன்னும் தொடர்கிறது.
பெரும்பாலானோர் வரவைவிட செலவு அதிகமாக செய்கின்றனர். பிறகு கடனாளியாகி தத்தளிக்கின்றனர். எனவே செலவை குறைப்பது அவசியம். இந்த செலவை குறைப்பதற்கு சில விஷயங்களை கடைபிடிப்பது அவசியம். அவை குறித்து பார்ப்போம்:
சம்பளம் வாங்கும் ஒரு நபர் மாத தொடக்கத்தில் கைக்கு சம்பளம் கிடைத்தவுடன் சேமிப்பு தொகையை முதலில் தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும்.

உலகின் பணக்கார நகரத்தில் வறுமையில் வாடும் மக்கள்!

ஆசிய அளவில் மக்களிடையே அதிக பண புழக்கம் கொண்ட நகரம் என்று பெயர் எடுத்த ஹாங்காங் இன்றைக்கு வறுமை நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை அங்கு நடக்கும் போராட்டங்கள் உணர்த்து கின்றன.
தொழிலாளர்களும், மாணவர்களும் அந்நகரத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மிகச் சிறந்த சுற்றுலா நகரமாகவும் திகழும் ஹாங்காங்கில் நடக்கும் போராட்டங்கள் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் வியப்பை அளிக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.

புற்றுநோய் மருந்தின் விலை ரூ.1 லட்சமாக உயர்வு! உண்மையா?

புற்று நோய்க்கான மருந்து விலை ரூ.1 லட்சம் வரை உயர்ந்து விட்டதாக கடந்த 2 மாதமாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த கூற்று உண்மையா என்பது குறித்து பார்ப்போம்.
பிரதமர் மோடி 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற போது அந்நாட்டு மருந்து நிறுவனங்களின் முதலீட்டை கவரவேண்டும் என்பதற்காக, விலை கட்டுப்பாட்டு பட்டியலில் இருந்து முக்கிய மருந்துகளுக்கு விலக்கு அளித்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.

புதிதாக தொழில் தொடங்க எளிய வழி!

இன்றைக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் எங்கு பார்த்தாலும் வெளிநாட்டு உணவு கடைகளை பார்க்கிறோம். உலக அளவில் முன்னணி பிரைடு சிக்கன் பிராண்ட் நம்ம ஊரு மதுரையிலும் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமானது?
இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு தங்களுக்கான நுகர்வோர்களை நமது நாட்டில் பிடிப்பது எப்படி?
ஒரு மளிகைக் கடை நடத்தும் அண்ணாச்சியை, இன்னொரு கடை திறக்க வேண்டியது தானே என்று கேட்டால், ‘ஐயோ.. ஒரு கடையை நடத்துவதற்கே பெரும் பாடாய் இருக்கிறது, இன்னொரு கடை எதற்கு?’ என்று கேட்பார்.

Pages