Feb 2015

ஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..

இன்றைக்கு குண்டூசி முதல் கனரக வாகனம் வரை அனைத்து பொருட்களையும் இணையம் வழியாகவே வாங்கிவிட முடியும். இது இணைய வழி வியாபாரம் அதாவது ணி ஙிusவீஸீமீss என்று அழைக்கப்படுகிறது.
இன்றைக்கு பல நிறுவனங்கள் தங்களது சேவைகளையும், பொருட்களையும் நேரடியாக மக்களிடம் கொண்டு செல்ல இணையவழி வியாபாரத்தை ஆரம்பித்து வருகின்றன.
புதிதாக தொழில் தொடங்க எண்ணுபவர்களும் இந்த வியாபாரத்தை நடத்த ஆரம்பிக்கலாம். இதற்கான நிறுவனம் துவங்குவதற்கான வழிமுறை என்ன என்பதை பார்ப்போம்:

கொட்டிகிடக்கிடக்கிறது... சுயதொழில் வாய்ப்புகள்

பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பு என்பது இன்றைக்கு மிகவும் பரந்து விரிந்து உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊறுகாய், அப்பளம், சமையல் பொடி போன்றவற்றை தயாரித்தல், தையல் வேலை செய்தல் உள்ளிட்டவற்றில் தான் பெண்கள் கவனம் செலுத்துவார்கள். இதைத்தான் சுய தொழிலாக பெருமையாக கருதுவார்கள்.
இன்றைய நிலைமையோ முற்றிலும் வேறு. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள், பெரும் அளவில் விரிவடைந்துள்ளன.

தொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை!

1991 ம் ஆண்டு இந்திய தொழில் முனைவோர்களுக்கு ஒரு பொன்னான ஆண்டு என்றே சொல்ல வேண்டும். அந்த ஆண்டில்தான் நமது இந்தியா உலகமயம், தாராளமயம், தனியார்மயம் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்தது.
இதன் காரணமாக ஏராளமான புதிய தொழில் வாய்ப்புகள் கிடைத்தன. அதற்கு முன்பெல்லாம் ஒரு புதிய தொழிலை தொடங்குவது என்பது குதிரை கொம்பான விஷயமாகும். அதற்கு காரணம் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவி வந்தது தான்.
புதிய பொருளாதார கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு இந்தியா ஏராளமான மாற்றங்களை கண்டது. புதிய தொழில்கள் ஏராளமாக இந்தியாவிற்கு வந்தன.

ஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி!

கோழி வளர்ப்பதற்கும், ஆடு வளர்ப்பதற்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகம் பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி கொள்வது சிறந்தது.
கோழி இறைச்சிக்கும், ஆட்டு இறைச்சிக்கும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகப்பெரிய தேவை உள்ளது. எனவே கோழி வளர்ப்பிலும், ஆடு வளர்ப்பிலும் முறையான பயிற்சி எடுத்து தொழில் செய்தால் லாபம் நிச்சயம்.

இன்ஜினியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன்கள்!

தமிழகத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் பட்டதாரிகள் படித்து முடித்து விட்டு வெளியே வருகின்றனர். ரூ-.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை செலவு செய்து, கனவுகளோடு படித்து முடித்து விட்டு, வேலை கிடைக்காமல் வேலையில்லா பட்டதாரிகளாக திகழும் நிலை உருவாகி உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.

அவசிய தேவையாகிவிட்ட ஆதார் அட்டை..

இந்திய மக்கள் அனைவருக்கும் அடையாள அட்டையை வழங்குவதற்காக, ஆதார் அட்டை என்கிற மிகப்பெரிய திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. தற்போதைய பாஜக அரசிலும் அந்த திட்டம் தொடர்கிறது.
இந்தியா முழுவதும் சுமார் 80 சதவீத மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ளோருக்கு இன்னும் 6 மாதத்தில் ஆதார் அட்டை வழங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் அட்டையில் ஒவ்வொரு வருக்கும் தனி எண் வழங்கப்படுகிறது. பயோமெட்ரிக் அடிப்படையில் கைவிரல் ரேகை, கண் கருவிழியின் ரேகை, முகம் போன்ற பல தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் அட்டையை போலியாக உருவாக்க முடியாது.

சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா?

இந்தியாவில் அந்நிய நிறுவனங்களும், இந்திய கார்பரேட் நிறுவனங்களும் பிரம்மாண்டமான அளவில் தொழில்கள் மேற்கொண்டாலும், இந்தியாவின் பொருளாதார வளர்சிக்கு பெரும் பங்கை ஆற்றுவது சிறு - குறு தொழில்களே.
சுமார் 70 சதவீதத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிப்பது இந்த சிறு---குறுந் தொழில்களே. இந்த குறுந்தொழில் வளர்ச்சிக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் அளித்தாலும் அவை போதுமானவையாக இல்லை என்பது இத்தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் குமுறலாக உள்ளது.

அருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்

அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்தியாவைவிட மக்கள் தொகை குறைந்த நாடுகள். எனினும் அந்நாடுகள் விவசாய உற்பத்தியில் தன்னிறைவை அடைந்துள்ளன. அந்நாட்டு விவசாயிகள் ஒருகிணைந்த பண்ணை முறையில் வேளாண்மை மேற்கொள்வதே இதற்கு முக்கிய காரணமாகும்.

Pages