Mar 2015

கட்டுப்பாட்டை திணிக்கும் உலக வர்த்தக அமைப்பு...இந்தியாவில் மானியம் ரத்து செய்யப்படுமா?

பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விசயங்களில் மேற்கத்திய நாடுகளின் கருத்துகளுக்கு உட்பட்டே வளரும் நாடுகள் செயல்பட வேண்டிஇருக்கிறது. பணக்கார நாடுகளின் விருப்பத்துக்கு மாறாக, ஒரு வளரும் நாடு முடிவெடுத்து விட்டால் அந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை, பணக்கார நாடுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முடக்கி விடும்.
1995-ல் WTO என்று அழைக்கப்படுகிற, உலக வர்த்தக அமைப்பு உருவானதிலிருந்தே, வளரும் நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டுத் திணிப்புகளை எதிகொள்ள வேண்டியிருக்கிறது.

வாழ்க்கையை பெண்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் பாரதீய மகிளா வங்கி

உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, மொத்த மக்கள் தொகை யில் சுமார் 50 சதவிகித பெண்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவர்களில் 25 சதவிகிதப் பெண்களுக்குத்தான் முறையான வங்கிக் கணக்கு இருகிறது. அதிலும் மிகச் சிலரே வங்கிக் கணக்கை பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
பெரும்பாலான குடும்பங்களில், நிதி நிர்வாக முடிவுகளை ஆண்களே எடுகிறார்கள். பல பெண்கள் தங்களது பொருளாதாரத் தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டுமென்றால் அக்கம்பக்கத்தினரையே நம்பி இருக்கின்றனர்.

கிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..

கிராமப்புற பகுதிகளில் உள்ள கடன் தேவைகளை நிவர்த்தி செய்வதற் காகவும், இதன் மூலம் கிராமப்புற வேலை வாய்ப்புகளை அதிகப் படுத்துவதற்காகவும் உருவாக்கப் பட்டதே ‘மண்டல கிராம வங்கிகள்’.
இதற்காக 1976 ம் ஆண்டு, மண்டல வங்கிகள் சட்டம், அரசால் இயற்றப்பட்டது. வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை விட இந்த வங்கிகள் சிறந்து விளங்கும் என்று நரசிம்மன் குழு பரிந்துரை செய்ததின் அடிப்படையில் ‘மண்டல கிராம வங்கிகள்’. நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. வங்கித் துறையில் இது ஒரு சாதனை நிகழ்வாக கருதப்படுகிறது.

முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக மாறியுள்ள தமிழகம்!

உலக அளவில் முதலீடுகளை ஈர்க்க, சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை வருகிற மே மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழக அரசு சென்னையில் நடத்த உள்ளது.
இதன் மூலம், மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கும் முடியும் என தமிழக அரசு கருதுகிறது.
இம்மாநாட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. சில முக்கிய விசயங்களை இம்மாநாட்டில் முதல்வர் குறிப்பிட்டார்.

பகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா?

சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை, பணியில் இருக்கும் சிலருக்கு எழக்கூடும். ஆனாலும் பணியை விட்டுவிட்டு சொந்தத் தொழில் செய்ய பலர் தயாராக இருப்பதில்லை.
சிலர் சம்பளத்துக்கு பணி புரிந்து கொண்டே பகுதி நேரமாக சொந்தத்தொழில் செய்வதுண்டு. அவ்வாறு செய்து தொழிலில் ஓரளவு வருமானம் கிடைக்கத் தொடங்கியவுடன் சம்பள பணியை விட்டுவிடுகின்றனர்.
இன்னும் சிலருக்கு பகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்குரிய வழிமுறைகள் தெரியாது.

தடைகளே சக்தியை உற்பத்தி செய்யும் இயந்திரம் MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்

ஒவ்வொரு மனிதனும் பல்வேறு சமயங்களில் பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறான். இதிலிருந்து மீண்டு வருவது என்பது அவரவர் மனநிலையை பொருத்த விஷயம். தன்னம்பிக்கை உடைய மனிதன் பிரச்சனையிலிருந்து எளிதாக மீண்டு விடுகிறான்.
ஒருவன் தன்மீது வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கையாகும். வாகனத்துக்கு எரிபொருள் எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு தெரியும். அதுபோல மனிதன் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு நம்பிக்கை அவசியம். நம்பிக்கை என்கிற எரிபொருள் உள்ளத்தில் இருக்கும்வரை நம்மை இயக்கி கொண்டே இருக்கும். நம்பிக்கையோடு இயங்கினால்தான் எந்த துறையிலும் சாதனை படைக்க முடியும்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் கிராஜுவிட்டி தொகை கிடைக்க வழிவகை செய்யுமா அரசு?

பணி ஓய்வுத் தொகை என அழைக்கப்படும் கிராஜுவிட்டி என்பது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று. இது வழங்கப்படுவதன் முக்கியநோக்கம், பணியாற்றும் ஊழியர்களின் சேவைகளை கௌரவிப்பதே.
கிராஜுவிட்டி தொகை வழங்குவதற்கான விதிமுறைகள் என்ன?
நிறுவனத்தின் ஊழியர் பட்டியலில் குறைந்த பட்சம் 10 நபர்களாவது இருக்க வேண்டும்.
இப்பட்டியலில் இடம்பெறுவோர் தற்காலிக பணியாளர்களாக இருக்கக்கூடாது.
அனைவரும் நிரந்தர ஊழியர்களாக இருக்க வேண்டும்
குறிப்பிட்ட நிறுவனத்தில் ஒரு நபர் குறைந்தது 5 வருடங்களாவது பணியாற்றியிருக்க வேண்டும்.

நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம்

பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தில் நாங்குநேரி சிறப்பு தொழில் நுட்ப பொருளாதார மண்டலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.அதனால்தான் கடந்தமாதம் ஜப்பான் நாட்டின் முதலீட்டாளர்கள் குழு இந்த பொருளாதார மண்டலத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக, குழுவின் தலைவர் ஹிரோயகி தக்கயமா கூறினார்.

விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும் ரயில்வே பட்ஜெட்... மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா?

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதன் சாதக பாதகங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

வேலைவாய்ப்புகளைப் அள்ளித்தரும் ‘மேக் இன் இந்தியா’

இந்தியாவின் பொருள் உற்பத்தித்துறை, 2013-ம் ஆண்டில் மொத்தப் பொருளாதாரத்தில் வெறும் 13 சதவீத அளவுக்கே பங்களித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமான நிலைமை என்று உலக வங்கியே மதிப்பிட்டுள்ளது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பொருள் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 34 சதவீதமாக உள்ளது.
இத்தகைய நிலையில், பொருள் உற்பத்தித் துறையின் பங்களிப்பை அதிகப்படுத்த கடந்த ஆண்டு நரேந்திரமோடி, மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவில் நிறைய வேலைகளை உருவாக்கவேண்டிய தேவை இருப்பதாலும் மேக் இன் இந்தியா திட்டம் மிகவும் அவசியமானது.

Pages