பட்ஜெட் எதிர்பார்ப்பு

பட்ஜெட்டில் வரிச்சலுகை.. எதிர்பார்ப்பில் மக்களும்,நிறுவனங்களும்

2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு, வரி அடிப்படையிலான பயன்களை மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அன்னிய முதலீடுகளை கவரவும் மத்திய அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தீட்டி வருவது அறிந்ததே.
இந்நிலையில் இந்தியாவில் முதலீடு செய்யும் அன்னிய நிறுவனங்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் வரிச் சலுகைகள் வாரி வழங்கப்படலாம் என கணிக்கப்படுகிறது.
இந்தியாவில் புதிதாக துவங்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்ததர நிறுவனங்களுக்கு முதல் 3 வருடங்களுக்கு நேரடி வரி தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது.