அலசல்

தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா? தொழிலாளர் சட்ட திருத்த மசோதா

மத்திய அரசு கொண்டு வர உள்ள, தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவிற்கு தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மத்தியில்,  அதிருப்பதி நிலவிக்கொண்டிருகிறது  என்பதை ஆங்காங்கே நடைபெறும் அவர்களின் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் இந்த திருத்த மசோதாவை கடுமையாக  எதிர்த்து வருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் சம்மேளனங்களும்,  சிலமாநில கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், அறிக்கைகள், பேட்டிகள் இவற்றின் வாயிலாக பதிவு செய்து வருகின்றன.  இந்த தொழிலாளர் சட்டதிருத்தத்தை எதிர்ப்பதற்கு காரணம் என்ன  என்ன என்பது குறித்து பார்ப்போம்.

கடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா?

கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு இதுவரை இல்லாத அளவிற்கு இருக்கிறது. இது சாமானிய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
பாசிப்பருப்பை விட எப்போதும் குறைவான விலைக்கு விற்பனையாகும் துவரம்பருப்பு விலையோ இன்றைக்கு கிலோ ரூ.130ஐ தொட்டு இருக்கிறது.  6 மாதங்களுக்கு முன்பு இதன் விலை ரூ.70ஆக இருந்தது. ஆக சுமார் 90 சதவீத விலை உயர்வை துவரம்பருப்பு அடைந்துள்ளது.

சிலிண்டர் மானியம் வங்கியில் செலுத்தப்படுவதால் ஆண்டுக்கு ரூ 15 ஆயிரம் கோடி மிச்சம்!

சிலிண்டர் மீதான மானியத்தை வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்த தொடங்கியபோது, பல்வேறு தரப்பினர் விமர்சனம்  செய்தனர். இத்திட்டத்தை நிறைவேற்றினால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும் என்றும், இதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியாது என்றும் சொல்லப்பட்டன.

விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் மக்கள்... பிரச்சனை தீர என்ன செய்யலாம்?

இந்தியா ஒரு விவசாய நாடு என்பதால் தனது சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. 1998ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோத னையை இந்தியா நடத்திய போது, இந்தியா மீது பொருளாதாரத் தடையை சில நாடுகள் விதித்தன. எனினும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும்  வலிமை இருந்ததால் அத்தடையைக் கண்டு இந்தியா அஞ்சத்தேவையில்லா மல் போனது குறிப்பிடத்தக்கது.

சாத்தியமாகுமா உண்மையான பொருளாதார வளர்ச்சி?

கடந்த 2008ல் தொடங்கிய உலக பொருளாதார நெருக்கடி இன்று வரை நீடித்து வருவதாக பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த நெருக்கடியில் இருந்து பல நாடுகள் இன்னும் மீளவில்லை.  

வறுமையை ஒழிக்குமா உணவுப் பாதுகாப்புச் சட்டம் ?

தனிமனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாரதி பாடினான்.  

அந்த காலகட்டத்தில் இந்தியா மாபெரும் வறுமையில் சிக்கி தவித்தது. அதற்கு காரணம் அன்றைய ஆங்கிலேய ஆட்சி. மக்களின் உழைப்பில் கிடைத்த வருமானத்தை, வரி என்ற பெயரில் சுரண்டியது ஆங்கிலேய ஆட்சி. அதனால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்து உணவுக்கே திண்டாடினார்கள். எனவேதான் மேற்சொன்ன வரியை பாரதி பாட நேர்ந்தது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் சென்று 65 ஆண்டுகள் கடந்து விட்டன. இவற்றில் பெரும்பாலான ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியே இந்தியாவை ஆண்டது. இடையில் ஜனதாவும், ஜனதாதளமும், பாரதீய ஜனதாவும் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தன.

வணிகர்களை அச்சுறுத்தும் உணவுப் பாதுகாப்புச் சட்டம்

அறிவியல் அடிப்படையில் உணவுப்பொருள்களை பாதுகாப்பதற்கும், உணவுப் பொருள்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை  இறக்குமதியை ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றிற்காகவும்   ஏற்படுத்தப்பட்டதுதான் ‘உணவுப் பாதுகாப்புச் சட்டம்‘ .

இந்தச் சட்டத்தின் நோக்கம் உயர்ந்தது என்று கூறப்பட்டாலும் இச்சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் நுகர்வோரையும், சிறு வணிகர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளதாக வணிகர்கள் கூறுகின்றனர்.
உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள், தற்காலிக கடைக்காரர்கள், தெருவில் கூவி விற்பனை செய்பவர்கள் கூட பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

40 சதவீத மக்களுக்கு இன்னும் சொந்த வீடு இல்லை...

உணவு, உடை ,உறைவிடம் இவை மனிதனின் அடிப்படைத் தேவைகள். இவற்றில் உணவு மற்றும் உடைத் தேவையை மக்களால் எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. உறைவிடத் தேவையை அவ்வளவு எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியாது.

முதலில் சொந்தமாக நிலம் வாங்க வேண்டும். பின்னர் பெரும் தொகை செலவு செய்து வீடு கட்ட வேண்டும். அதனால்தான் வீடு வாங்குவது பலருடைய வாழ்நாள் கனவாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கின்றனர்.

கச்சா எண்ணை குறைவால் விலை சாதகமடையும் இந்தியா

கச்சா எண்ணெயின் விலை உலக அளவில் கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 110 டாலருக்கு விற்றது. தற்போது சுமார் 40 சதவீதம் அளவிற்கு விலை குறைந்து 65 டாலருக்கு விற்பனையாகி வருகிறது.
இந்த அளவிற்கு அதிரடியாக விலை குறைந்த தற்கு காரணம் என்ன? கச்சா எண்ணெயின் விலை குறைவதற்கும் அதிகரிப் பதற்கும் முன்பெல்லாம் காரணமாக இருந்தது ஐக்கிய அரபு நாடுகள்தான். இப்போது விலை குறைவிற்கு காரணமாக இருப்பது அமெரிக்காதான் என்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் அதிக அளவு சப்ளையாகி கொண்டிருக்கிறது.