May 2015

‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’

ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனத்தின் கிளையை உலகம் போற்றும் சிங்கப்பூர் நகரத்தில் துவங்கியதற்கு முக்கிய காரணம் என்ன என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள். சிங்கப்பூர் நாட்டுடன் தமிழக மக்களுக்கு மொழி , பண்பாடு, கலாச்சார ரீதியாக மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதால் இந்த நாட்டில் ஒரு நிறுவனம் துவங்க வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக என் உள்ளத்தில் இருந்து வந்தது. அதன் வெளிப்பாடுதான் சிங்கப்பூரில் உள்ள எங்களது ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனம்.

பயனுள்ள காப்பீட்டு திட்டங்கள்

நியூ இந்தியா அஷயூரன்ஸ் நிறுவனம் 1972 ம் ஆண்டு முதல் பல சமூக நல காப்பீட்டு திட்டங் களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் பின்வரும் காப்பீட்டு திட்டங்கள் மிகவும் முக்கியமானவை.
கால்நடை காப்பீட்டு திட்டம்:
இத்திட்டத்தின் படிஅனைத்து கால் நடைகளையும் இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். கால்நடையின் மதிப்புத்தொகையில் ஆண்டுக்கு 4% பிரீமியம் செலுத்தினால் போதும்.
கோழிப்பண்ணை காப்பீட்டுதிட்டம்:

மக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’

இந்திய அஞ்சல் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’ சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி மற்றும் திருமணத்துக்கு தேவையான பணத்தை திடீரென திரட்டுவது மிகவும் சவாலான பணி. பெரும்பாலான பெற்றோர்கள் கடன் வாங்கியே இந்த தேவையை நிறைவேற்றுகின்றனர்.
பல குடும்பங்கள் கடனாளியாவது இந்த விஷயத்தில்தான். இதற்கு தீர்வாக அமைந்திருப்பது ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’. இந்தியில் இத்திட்டம் ‘சுகன்யா சம்ருத்தி யோஜனா’ என்று அழைக்கப் படுகிறது.

பொருளாதார வீழ்ச்சியால் தத்தளிக்கும் ஐரோப்பிய நாடுகள்

உலகம் முழுவதும் 2007-ல் பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட போது பல நாடுகள் தவித்தன. பொருளாதாரம் எப்போது மீட்சியடையும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்தன.
2010-ல் பொருளாதாரம் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டது என ஐரோப்பாவும், அமெரிக்காவும் எண்ணி மகிழ்ச்சி கொண்டன. ஆனாலும் மீண்டும் பொருளாதார சுணக்கம் ஏற்பட்டது.
17 நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதும் அவற்றிற்கு பொது நாணயமாக யூரோ இருப்பதும் நமக்கு தெரிந்த சங்கதிதான். அமெரிக்காவில் ஏற்பட்டது போல ஐரோப்பாவிலும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது.

சமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்!

சமோசாவின் ருசி பலருக்கும் பிடித்தமான ஒன்று. கடைகளில் எத்தனை பலகாரங்கள் இருந்தாலும் முதலில் விற்றுத்தீர்வது சமோசாவாகத்தான் இருக்கும்.
சில கடைக்காரர்கள் சமோசாவை தாமே தயாரிகின்றனர். ஆனால் பல கடைக்காரர்கள் வெளியில் தயாரிக்கப்படும் சமோசாவை வாங்கித்தான் விற்கின்றனர்.
வடை, போண்டா சுடுவது போல் சமோசா தயாரிப்பது எளிதல்ல. அதற்கு முன் உழைப்பும், நேரமும் அதிகம் தேவை என்பதால்தான் கடைக்காரர்கள் சமோசாவை சொந்தமாக தயாரித்து விற்க ஆர்வம் காட்டுவதில்லை.
நல்ல தரத்தோடும் சுவையோடும் சமோசா தயாரிப்பவர்களிடமே கடைக்காரர்கள் வாங்குகின்றனர்.

பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

வல்லரசு நாடுகளுக்கு இணையாக, இந்தியா அதிநவீன ஏவுகணைகளை தொடர்ந்து தயாரித்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லக்கூடிய, நவீன பிரமோஸ் ஏவுகணை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

குறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு

நம் மக்கள் வங்கி, தங்கம் போன்றவற்றில் அதிக முதலீட்டை மேற்கொள்வது சரியான அணுகுமுறை இல்லை என்றே சொல்லவேண்டும்.
ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்டு போன்றவற்றில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனமான முடிவாகும். மியூச்சுவல் ஃபண்டுகளில் மக்கள் அதிகளவில் முதலீடு செய்யவேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஒரு முதலீட்டு நிறுவனம் பொதுமக்களிட மிருந்து நிதியை திரட்டி, முதலீடு செய்து, கிடைக்கும் லாபத்தின் ஒரு சிறு பகுதியை, தான் எடுத்துக்கொண்டு மீதியை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதுதான் மியூச்சுவல் ஃபண்ட்டின் அடிப்படை.

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை!

இன்றைய நிலையில் ஒரு நபரால் கடன் வாங்காமல் வீடு கட்டுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. கடன் வாங்கித்தான் பெரும்பாலா னோரால் வீடு கட்ட முடிகிறது.
இத்தகைய சூழ்நிலையில், வங்கிகளில் ரூ.10 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுவோருக்கு சில விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ள நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.
வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குவோர், வரம்புத் தொகை, முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம், இதர செலவுகள் போன்றவற்றை ஏற்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்தக் கட்டணங்கள் வீட்டுக்கான கடனில் சேர்க்கப்படுவது இல்லை.

இந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..! டாலரின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுமா?

உலகம் முழுவதும் அமெரிக்க டாலரில் வர்த்தகம் நடைபெறுவது, அமெரிக் காவின் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாகும்.
டாலரின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து யூரோவை அறிமுகப்படுத்தின. ஆனாலும் டாலரின் செல்வாக்கை கட்டுப்படுத்த யூரோவால் முடியவில்லை.
ரஷ்யா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கும் தமது நாட்டு நாணயங்கள் உலக அளவில் செல்வாக்கு செலுத்த வேண்டும் என்று ஆசைதான்.

25 வயதை கடந்த ஒவ்வொருவருக்கும் ரூ 25 ஆயிரம் இலவசம்! இங்கல்ல.... சிங்கப்பூரில்

சிங்கப்பூர் மக்கள் அவர்களது திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் 25 வயதை கடந்த ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் உதவித் தொகையாக அந்நாட்டு அரசு 500 வெள்ளி[25 ஆயிரம் ரூபாய்] ஒதுக்கியுள்ளது. இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தை சிங்கப்பூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு நாட்டினரும் வியந்து போற்றுகிறார்கள்.
சிங்கப்பூர் போல, தனது குடிமக்களின் திறன் வளர்ச்சிக்கு இப்படிப்பட்ட திட்டத்தை வேறு எந்த நாடும் செய்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ என அழைக்கப்படும் இந்தத் திட்டம் எதிர்காலத் திறன்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக அந்நாட்டினர் தெரிவிக்கின்றனர்.

Pages