பொருளாதார சிந்தனை

குறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய நிதிச்சட்டத்தின் திருத்த வரைவில், ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கான வரைவுகள் உள்ளன.  இது வங்கிப்பணியாளர்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்ட காரணம் என்ன?

பொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்?

ஒரு நாட்டின் பலம் என்பது அந்நாட்டின் பொருளாதார பலத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. பொருளாதார பலத்தைப் பொறுத்த வரை சில நாடுகள்தான் முன்னணியில் இருக்கின்றன.
பல நாடுகள் பின்தங்கியே இருக்கின்றன. உலகில் மூன்று வகையான பொருளாதார தத்துவங்கள் நடைமுறையில் உள்ளன.  அவை, பொதுவுடமைப் பொருளாதாரம், முதலாளித்துவ
பொருளாதாரம், கலப்புப் பொருளாதாரம் ஆகியவையாகும்.  இன்றைக்கு பெரும் பாலான நாடுகளில் முதலாளித்துவ பொருளாதார கோட்பாடுதான் பின்பற்றப்படுகிறது.

போற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்

உலகின் வல்லரசு நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிற அமெரிக்கா 6 ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. தற்போது அந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. அதற்கு காரணம் அதிபர் ஒபாவின் நிர்வாக திறமைதான்.

அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் என்றாலும் அது ஏற்கனவே முன்னேறிய நாடாக இருப்பதனால் அந்நாடு,  இன்னும் உலகின்  முக்கியத்துவம் வாய்ந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

தொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’

ஒரு தொழிலில் வெற்றி பெற பல்வேறு அம்சங்கள் தேவை. அறிவு, ஆற்றல் முதலீடு, தொழில் நிபுணர்கள் உள்ளிட்ட அம்சங்கள் தேவை. ஆனால் இவற்றை எல்லாம் ஒருங்கிணைக்க மனதிட்பம் வேண்டும். அதாவது மன உறுதி வேண்டும்.
 
எல்லாம் இருந்து மனதில் உறுதி இல்லை என்றால் வெற்றி சாத்தியமில்லை. தொழிலில் ஈடுபடும் ஒருவரின் மன உறுதியைப் பொறுத்தே அவரது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான் வள்ளுவர் ஒருவனின் மன திட்பமே வினை திட்பம் என்கிறார்.

முதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...

                                 “முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை’’
                                  “ஆக்கம் கருதி முதல் இழக்கும்’’ என்பது குறள்

நமது சமுதாயத்தில் முதலாளித்துவம் என்பதே இல்லை. அதே சமயத்தில் முதல் இல்லாமல் எந்தச் சமுதாயமும் இல்லை. தொழில்கள் பெருகி வேலைவாய்ப்பு பெருக வேண்டுமெனில் முதல் அவசியம். எனவே இந்த முதலை போடுபவர் தேவை. முதலை போடுவதால் தான் அவருக்கு முதலாளி என்று பெயர்.