Apr 2015

தமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்

தமிழகத்தில் பல்வேறு பஞ்சங்கள் தோன்றியுள்ளன. அவற்றில் முக்கியமானது 1876 ம் ஆண்டின் தாது வருஷப் பஞ்சம். இன்னொரு பஞ்சம்1896ல் தமிழகத்தைத் தாக்கியது. இந்த பஞ்சங்களுக்கு முக்கிய காரணம் ஆங்கிலேயர்களின் அடக்குமுறை கொண்ட ஆட்சி முறையே.
கிழக்கிந்தியக் கம்பெனிதான் சென்னை நகரை உருவாக்கியதென்பது நாம் அறிந்ததே. அதன் ஆட்சியில் 1640 ல் துவங்கி 1907 வரை சுமார் 17 முறை அன்றைய சென்னை மாகாணத்தை உணவுப் பஞ்சங்கள் தாக்கின.
துவாதசப் பஞ்சம், தாதுப் பஞ்சம், குண்டூர்ப் பஞ்சம், ஒரிஸ்ஸா பஞ்சம் என்று பஞ்சங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை இந்த பஞ்சங்கள் காவு வாங்கின.

டிரேட் மார்க் பெறுவது அவசியமா?

தொழிலை நடத்துவோருக்கு டிரேட் மார்க் பெறுவது மிக முக்கியமானதாகும். ஒரு நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு டிரேட் மார்க் அவசியமானதாக கருதப்படுகிறது.
பொருளோ,சேவையோ மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெறும் போது அதற்கான முழு உரிமையும் அதன் நிறுவனத்தை சார்ந்தது என்பதை உணர்த்துவதுதான் இந்த டிரேட் மார்க். வார்த்தை, லோகோ, லேபிள் என எதுவாக வேண்டுமானாலும் இந்த டிரேட் மார்க் இருக்கலாம்.

தமிழக பட்ஜெட் எப்படி? ஓர் அலசல்

இந்தியாவில் மற்ற மாநிலங்கள் யாவும் தங்களது பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு, கடைசியாக மார்ச் 25 ல் தமிழக சட்டசபையில் 2015-16 நிதியாண்டுக் கான பட்ஜெட்டை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு பயனளிப்பதாக அமைந்துள்ளதா என்பதை விரிவாகப் பார்ப்போம்.
மாநிலத்தின் மொத்த வருவாயில் பெரும்பகுதி மாநில அரசின் சொந்த வரிவருவாயே ஆகும். வணிக வரி, வாகனங்கள் மீதான வரி, ஆயத் தீர்வை, முத்திரைத்தாள், பத்திரப்பதிவு ஆகியன மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் முக்கியமானவை ஆகும்.

‘பாரம்பரியம் மிக்க பவானி ஜமக்காள தொழில் பாதுகாக்கப்பட வேண்டும்’

பழனி என்றால் பஞ்சாமிர்தம் ஞாபகத்திற்கு வருவதைப்போல பவானி என்ற பெயரைக் கேட்டாலே ஜமக்காளம் தான் ஞாபகத்திற்கு வரும். 1947 ம் ஆண்டே ஜமக்காளத்திற்கான காப்புரிமையை பவானி பெற்று விட்டது. ஜமக்காளத்தை தமிழில் தரை விரிப்பு என அழைக்கிறார்கள்.
தமிழகத்தை கடந்து ஆந்திரா, கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பவானி ஜமக்காளம் பிரபலம். மேலும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்

கிராமப்புறங்களில் பசுமை இயற்கையாகவே கொட்டிக் கிடக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் பசுமை என்பது எட்டாக்கனிதான். நகர்ப்புற வீடுகள் கான்கிரீட் வனங்களாகிவிட்டன என்று சொன்னால் அது மிகையில்லை.
எனவேதான் வீட்டில் பசுமையை ஏற்படுத்த ஜன்னல், முகப்பு, முற்றம், வராந்தா, வரவேற்பறை, கார் நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் என பல இடங்களில் பூச்செடிகள், பசுமை தரும் செடிகள் இவற்றை வைப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
உயர்தட்டு மக்கள், நடுத்தர வருவாய்ப் பிரிவினர், நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் என அனைத்து தரப்பிலும் இவற்றை வைப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

ரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு! மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள்!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா உடன்குடியில் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல்மின்நிலையம் அமைப்பதற்கான பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
இந்த அனல்மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை இறக்குவதற்காக உடன்குடி அருகே புதிய துறைமுகம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது.
இத்திட்டத்திற்கென ரு.1,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை செயல்படுத்தும் பணியில் மின்சார வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்

நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து நெருக்கம் அதிகமாகும் போது தொற்று நோய் பரவல், குற்றங்கள் பெருகுதல், சுற்றுச் சூழல் பாதிப்பு ஆகியவை மிகவும் அதிகரிக்கும். இவற்றைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது.
பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் ஒரு அரசுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஸ்மார்ட் சிட்டியாக ஒரு நகரம் அமையும் போது இத்தகைய பிரச்சனைகளை கையாள்வது மிகவும் எளிது.
அதனால் தான் மத்திய அரசு கடந்த ஆண்டு ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான செயல்பாட்டையும் தொடங்கி உள்ளது.

ஒவ்வொரு இளைஞனும் கனவு காண வேண்டும்-MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்

இது மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலம். மாணவர்கள் குறிப்பாக பிளஸ்டூ மாணவர்கள் எதிர்காலம் குறித்த யோசனைகளில் திளைத்திருப்பர். பலரது யோசனை உயர்கல்வி குறித்ததாக இருக்கும்.
படிப்பை தொடர முடியாத சூழலில் உள்ளவர்கள், எந்த வேலைக்கு செல்வது என்பது குறித்து யோசிப்பர். எது எப்படியிருப்பினும் இந்த இளைஞர்கள்தான் வருங்காலத்தை ஆளப்போகிறவர்கள். இவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்ன ஒரு விஷயத்தை இங்கு சொல்வது நல்ல தெளிவை ஏற்படுத்தும்.

நல்ல லாபம் தரும் புதினா சாகுபடி

ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோ வரை மகசூல் தரும் புதினாவை பயிர் செய்வது மிகவும் எளிது. மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் புதினாவை பயிரிட்டு நல்ல லாபம் பார்க்கின்றனர்.
புதினாவை வணிக நோக்கில் பயிரிடுவது நல்ல லாபத்துக்கு வழி வகுக்கும் என்பது வேளாண் அலுவலர்களின் கருத்தாக உள்ளது.
புதினா ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு தாவரம் என்று கூறப்படுகிறது. சமையலில் புதினாவிற்கு முக்கிய இடம் உண்டு.

தொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்

பல்வேறு இடையூறுகளை கடந்து சொந்தமாகத் தொழில் தொடங்கி வெற்றி பெற்றவர்கள் ஏராளம். தொழில் வெற்றிகரமாக நடக்கும் போது அதை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கும்.
தொழிலை உரிய முறையில் விரிவாக்கம் செய்தவர்கள்தான் இன்றைக்கு பெரும் தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கிறார்கள். எனவேதான் தொழிலை விரிவாக்கம் செய்ய பலர் விரும்புகின்றனர்.
விரிவாக்கம் செய்து தோல்வியில் முடிந்த தொழில் கதைகளும் நமது நாட்டில் உண்டு. இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, தொழிலை விரிவாக்கம் செய்ய முனைபவர், செயல்பட வேண்டும்.

Pages