ஆசிரியர் பார்வை

சாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்!- சிறப்பு கட்டுரை

பில்கேட்ஸ்... இந்தப் பெயரை உச்சரிக்காத மனிதர்களே உலகத்தில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு செல்வாக்கு படைத்தவர். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து  உலகின் நம்பர் 1 பணக்காரராக உயர்ந்தவர்.  பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே முதல் நிலை பணக்காரராக உயர முடியும் என்ற எண்ணத்தை உடைத்தெரிந்த மாபெரும் மனிதர் இவர்.   

வல்லரசுக் கனவை விதைத்துவிட்டு விண்ணுக்கு சென்றுவிட்ட ஏவுகணை நாயகன்!

இந்தியக் குடியரசுத் தலைவர்களாக பதவி வகித்தவர்களில், மக்களின் இதயங்களை கவர்ந்தவர் யார் என்ற கேள்வியை  முன்வைத்தால், அதற்கான ஒரே பதில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற பெயராகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு அவரது  செயல்பாடுகள் அவரது பதவிக்காலத்தின் போது இருந்தன.  
உயர் பதவிகளில் இருப்பவர்கள் அதிகார மட்டத்திலும், வெளிநாட்டுத் தலைவர்களின் மத்தியிலும் வளைய வருபவர்களாகவே இருப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்து மக்கள் சேவகராக வலம் வந்தவர் அவர்.

தடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...

அமெரிக்காவில் சாமானிய மக்களும் பலன் பெறும் வகையில் அதிபர் ஒபாமா,   இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, சுகாதார காப்பீட்டு திட்டத்தை   கொண்டு வந்திருந்தார். அமெரிக்காவில் இது ஒபாமா கேர் என அழைக்கப்படுகிறது. இதற்காக தனிச்சட்டமும் கொண்டு வந்திருந்தார் ஒபாமா.

இந்த சட்டம், அரசாங்கத்தின் சுகாதார காப்பீட்டு திட்டங்களிலோ அல்லது பணி புரியும் நிறுவனங்கள் செயல்படுத்துகிற இன்சூரன்ஸ் திட்டங்களிலோ  பலன் பெறாத தனிநபர்கள், குறைந்த செலவிலான அரசின் புதிய காப்பீட்டுத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறுகிறது.

நினைத்ததை அடைய வேண்டுமா?

எவ்வளவு மெதுவாக செல்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறீர்கள் என்பதே முக்கியம்’ என்றார் சீன தத்துவஞானி கன்பூசியஸ். இந்தக் கருத்துக்கு உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.
 தோஹா வங்கியின் தலைவராக இருப்பவர் டாக்டர் ஆர்.சீதாராமன். உலக அளவில் தோஹா வங்கியை வளர்த்தெடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர். தமிழரான இவரது சொந்த ஊர் கும்பகோணம் ஆகும்.
 

முதலீடுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்

பதவியேற்று ஒரு வருடத்துக்குள் 18 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு சாதனை படைத்திருக்கிறார் மோடி. அவரது வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தாலும்,  அதைப் பொருட்படுத்தாமல் இந்தியாவுக்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவந்து குவித்து, பெரும் பொருளாதார வளர்ச்சியை எட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டு வருகிறார் மோடி.
 

மின்னல் வேகத்தில் பணிகளை தொடங்கிய தமிழக முதல்வர்

ஏழு மாதங்களுக்குப்பிறகு  ஜெயலலிதா மீண்டும் 5–வது முறையாக முதல் அமைச்சராக பதவி ஏற்றதை தமிழக மக்கள் ஒரு திருவிழா போலவே கொண்டாடினார்கள். கடந்த 7 மாதங்களாக ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடுதான் தமிழக அரசு இயங்கினாலும் மக்கள், அம்மா இல்லையே என்று எதிர்பார்த்ததை காண முடிந்தது.
 

சில குறைகள் இருந்தாலும், கடந்த நான்காண்டு கால அதிமுக ஆட்சி மிகச் சிறப்பாகவே செயல்பட்டது. அதனால்தான் சென்ற ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 44 சதவீத வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றியை அடைந்தது.

‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’

ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனத்தின் கிளையை உலகம் போற்றும் சிங்கப்பூர் நகரத்தில் துவங்கியதற்கு முக்கிய காரணம் என்ன என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள். சிங்கப்பூர் நாட்டுடன் தமிழக மக்களுக்கு மொழி , பண்பாடு, கலாச்சார ரீதியாக மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதால் இந்த நாட்டில் ஒரு நிறுவனம் துவங்க வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக என் உள்ளத்தில் இருந்து வந்தது. அதன் வெளிப்பாடுதான் சிங்கப்பூரில் உள்ள எங்களது ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனம்.

இந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை

உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவியபோதும் இந்தியாவின் பொருளாதாரம் அதனால் பெரிதும் பாதிக்கப்படவில்லை. ஓரளவு பாதிப்பு இருந்தது என்றாலும் மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் பெரிய அளவு பாதிப்பை இந்தியா அடையவில்லை. அதனால் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் ஆச்சரியத் துடன் பார்க்கின்றன.
ஆசிய அளவில் பொருளா தார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் உள்ள இரண்டு பெரிய நாடுகள் என்றால் அது இந்தி யாவும், சீனாவும் தான்.

சரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி

டந்த மார்ச் 23ம் தேதி அன்று சிங்கப்பூரே மீளாத்துயரில் ஆழ்ந்தது. காரணம் சிங்கப்பூரின் சிற்பி எனப் புகழப்படும் லீ குவான் யூ
அவரது 91வது வயதில் இம்மண்ணுலகை விட்டு சென்றுவிட்டார். இந்த சிற்பிக்கு நமது பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

லீ குவான் யூ 30 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு ஒரு சிறிய தீவாகத்தான் சிங்கப்பூர் இருந்தது.
தனது தனிச்சிறப்பு மிக்க ஆட்சியின் மூலம் சிங்கப்பூரை ஒரு மாபெரும் பொருளாதார சக்தி மிக்க நாடாக மாற்றினார்.

ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வழி வகுக்குமா பட்ஜெட் ? வியிதி. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன்

ஓர் அரசு தொடர்ந்து எந்த திசையில் செல்லவிருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துவது பட்ஜெட் எனப்படும் நிதிநிலை அறிக்கைதான். அந்தவகையில் தனது முதல் நிதிநிலை அறிக்கையை மோடி தலைமையிலான பாஜக அரசின் நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கிறார்.
இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும், இந்தியப் பொருளாதரத்தின் நம்பகத்தன்மை உலக அரங்கில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Pages