Mar 2015

முயன்றால் முடியும்...

இந்தியாவில் 15 சதவீத மாணவர்களே மேற்படிப்புக்குச் செல்வதாகவும், மாநில அளவின்படி  தமிழ்நாட்டில் 42 சதவீத மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்வதாகவும்  மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை  நடத்திய கணக்கெடுப்பு சொல்கிறது.
இது  தமிழகத்துக்கு பெருமையான விசயம் என்றாலும், உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பலர் வேலைத்திறனுக்கு தகுதி  இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தி கவலை அளிப்பதாக உள்ளது.

ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வழி வகுக்குமா பட்ஜெட் ? வியிதி. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன்

ஓர் அரசு தொடர்ந்து எந்த திசையில் செல்லவிருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துவது பட்ஜெட் எனப்படும் நிதிநிலை அறிக்கைதான். அந்தவகையில் தனது முதல் நிதிநிலை அறிக்கையை மோடி தலைமையிலான பாஜக அரசின் நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கிறார்.
இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும், இந்தியப் பொருளாதரத்தின் நம்பகத்தன்மை உலக அரங்கில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

பெட்ரோல் செலவு இனி இல்லை.... வருகிறது.. சோலார் ஸ்கூட்டர்!

உலக அளவில் பெட்ரோல் - டீசலின் விலை குறைந்து வந்தாலும் இது தொடராது என்றே பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர். எனவேதான் மாற்று எரிசக்திக்கு அனைத்து நாடுகளுமே ஊக்கம் கொடுத்து வருகின்றன.
வாகன போக்குவரத்து மிகவும் அதிகரித்து விட்ட நிலையில், இனியும் பெட்ரோல் &- டீசலை மட்டும் முழுமையாக நம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்த இந்திய அரசும், பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகிறது.
இந்த வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

வரி கட்டுபவர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகள்என்ன?

வரி கட்டுபவர்களால் தான் நாட்டுக்கே
வருமானம் கிடைக்கிறது. டேக்ஸ் பேயர் (வரி செலுத்துவோர்) என்று சொல்லப்படுகிற இவர்களுக்கு பல்வேறு வரிச்சலுகைகளை, வருமான வரித்துறை வழங்கியுள்ளது. அவை
என்ன?
கல்விக்கடன் பெற்றிருக்கும் ஒருவர் செலுத்தும் வட்டிக்கு, வரி விலக்கு பெற முடியும். பிரிவு 80சியின் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.
குழந்தைகளுக்கோ, பெற்றோர்களுக்கோ ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் ரூ 25 ஆயிரம் வரை, வரி விலக்கு பெற முடியும். பிரிவு 80டியின் கீழ் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.

வரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா?

இந்தியாவில் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தாலும், பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இன்னும் வங்கிச் சேவை கிடைக்காத நிலைதான் இருந்து வருகிறது.
இதனை உணர்ந்த மத்திய அரசு 2013ம் ஆண்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் வங்கிச் சேவையை அளிப்பதற்கான ஆலோசனையை வழங்குவதற்கு நசிகேத் மோர் என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
இந்த குழுவின் ஆலோசனைபடி, பேமென்ட் பேங்க் மற்றும் சிறிய வங்கி என்ற இரண்டு வகை வங்கிகளை உருவாக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.

குல சேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்.. எழுச்சி பெறும் ரியல் எஸ்டேட் துறை...அதிகரிக்கும் வேலை வாய்ப்பு.. MFJ. லயன் டாக்டர். வீ.பாப்பா ராஜேந்திரன்

விண்வெளி ஆய்வில்அமெரிக்கா, ரஷியா போன்ற
நாடுகள்தான் கோலோச்சி கொண்டிருந்தன. தற்போது இந்தியாவும் அந்நாடுகளுக்கு சவால் விடும் வகையில் விண்வெளி ஆய்வில் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது.
ஒரு ஹாலிவுட் படம் எடுக்கும் செலவில் செவ்வாய் கிரகத்துக்கே விண்கலத்தை அனுப்பிய நாடு உலகில் இந்தியா மட்டுமே என்பது நாமெல்லாம் பெருமை படக்கூடிய விசயம். விரைவில் நிலவுக்கும், செவ்வாய்கிரகத்துக்கும் மனிதனை அனுப்பவும் இந்தியா திட்டமிட்டு அதற்கேற்ப செயல்பட்டு வருகிறது.
இந்த பணிகளையெல்லாம் சிறப்பாக செய்துகொண்டிருப்பது இந்திய விண்வெளி ஆய்வு மையமாகும். இது சுருக்கமாக இஸ்ரோ என்று அழைக்கப்படுகிறது.

ஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை!

ஆட்டோமொபைல் உற்பத்தியில் சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவின் பங்களிப்பு உள்ளது.
ஆட்டோமொபைல் சந்தையில் உலக அளவில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது என்றால் அதற்கு காரணம் தமிழகம் தான். ஆட்டோமொபைல் தயாரிப்பில் தமிழகத்தின் பங்கு மட்டும் 35 சதவீதமாக உள்ளது. குறிப்பாக சென்னை ஆசிய அளவில் ஆட்டோமொபைல் தொழிலின் தலைமையகமாக திகழ்கிறது.

6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்!

கார்பரேட் நிறுவனங்களின் அபரிமித வளர்ச்சியைப்பற்றி நாம் இன்றைக்கு வியந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.
எவ்வளவுதான் நாம் வியந்து பேசினாலும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் குறு சிறு தொழில் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில், கார்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவே.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு 1954ல் ‘குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம்’ என்ற அமைப்பைத் தொடங்கியது.

ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஐடி நிறுவனங்கள்...அச்சத்தில் உறையும் பணியாளர்கள்!

ஐடி துறையில் இந்தியா முழுவதும் சுமார் 32 லட்சம் ஊழியர்கள் பணி புரிகின்றனர்.இன்றைய நிலையில் அனைத்து ஊழியர்களுமே அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள்.எந்த நேரத்தில் வேலை பறிபோகுமோ என்ற கவலை இவர்களை வாட்டி வதைக்கிறது. ஏனெனில் ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
ஐடி துறையில் மிகப் பழமையான நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் நிறுவனம், இந்தியாவில் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை 1.65 லட்சம் என்ற அளவில் இருந்து 1 லட்சமாக குறைக்க முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாமா?

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைப் போல, இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் இந்தியர்கள் சிலருக்கு, வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய ஆர்வம் இருக்கும்.
செபியில் பதிந்துள்ள, மியூச்சுவல் ஃபண்ட்களை வழங்கும் இந்திய நிறுவனங்கள் 7மில்லியன் அமெரிக்க டாலர் வரம்பிற்குள் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
எனவே செபியில் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலமாக வெளிநாட்டில் முதலீடு செய்யலாம். இடர்பாட்டு அடிப்படையை பொறுத்து, முதலீடு செய்ய பல்வேறு முதலீட்டு தேர்வுகள் உள்ளன.

Pages