சுயதொழில் தொடங்க போகிறீர்களா?

நம்மிடம் உள்ள சிறிய தொகையை கொண்டு தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது.
மத்திய அரசும் மாநில அரசும் போட்டிபோட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகின்றன.
மின் மற்றும் மின்னணு பொருட்கள், தோல் சம்பந்தமான பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், மருந்துப் பொருட்கள், சூரியசக்தி உபகரணங்கள், ஏற்றுமதி ஆபரணங்கள், மாசுகட்டுப்பாடு உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், சிக்கன கட்டுமான பொருட்கள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றின் உற்பத்திக்கு மத்திய மாநில அரசுகள் மானியம் வழங்கி அத்தொழில்களை ஊக்குவித்து வருகின்றன.
அரசால் இத்தொழில் களுக்கு 15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.
சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி, முதல் ஆறு ஆண்டுகளில் செலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு ஈடான தொகை, மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.
வேலை வாய்ப்பினைப் பெருக்குவதற்காக உற்பத்தி தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்த, நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் வரை அரசு, மானியம் வழங்குகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் எவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
1971ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம். தொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவி செய்கின்றன. அதனைப் பெறுவது எப்படி? என்று சிலர் கேட்பது உண்டு.
ஒரு தொழில் முனைவோர், தான் செய்யப்போகும் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம்(சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேணடும்.
அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். கடன் வாங்கிய பிறகு அதை மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வரை வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும்.
கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யும் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்தும் கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம்.
முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது.
ஆனால் தற்போது அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே இடத்தில் அனுமதி கிடைக்கும் வகையில் எளிதாக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்:
தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியாக தொழிலை நடத்தினால் வெற்றி பெற முடியும்.
உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமூகமான அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும்.

Issues: