சுய முன்னேற்ற தொடர்-MJF.லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன்

முயன்றால் முடியும்...

இந்தியாவில் 15 சதவீத மாணவர்களே மேற்படிப்புக்குச் செல்வதாகவும், மாநில அளவின்படி  தமிழ்நாட்டில் 42 சதவீத மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்வதாகவும்  மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை  நடத்திய கணக்கெடுப்பு சொல்கிறது.
இது  தமிழகத்துக்கு பெருமையான விசயம் என்றாலும், உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பலர் வேலைத்திறனுக்கு தகுதி  இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தி கவலை அளிப்பதாக உள்ளது.

எப்போதும் பாசிட்டிவாக இருங்கள்...

தான் ஓர் அறிவாளி என்று கர்வம் கொண்டு ஒருவன் செயல்பட்டு விட்டால் மட்டும் வாழ்க்கையில் ஜெயித்துவிட முடியாது. அப்படி ஒருவன் ஜெயித்ததற்கான சான்று எதுவும் வரலாற்றில் கிடையாது. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது தான் தன்னம்பிக்கை. 
“உங்கள் நோக்கம் நிலவாக இருக்கட்டும். ஒருவேளை அதில் தோற்றால், நீங்கள் ஒரு நட்சத்திரத்தை வெல்லக்கூடும்“ என்பது வெளிநாட்டு அறிஞர் ஒருவரின் கூற்று. தன்னம்பிக்கை உள்ளவன் இந்தக் கூற்றை வாழ்க்கையில் கடைபிடிக்கிறான். அறிவாளியோ இந்தக் கூற்றை ஆராய்ச்சி மட்டுமே செய்கிறான்.

எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கையை அமைப்பது எண்ணங்களே. ஆம்.. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை கட்டமைப்பது எண்ணங்களே. எப்படிப்பட்ட எண்ணங்களை எண்ணுகிறான் என்பதைப் பொறுத்தே அவனது வெற்றி தோல்வி அமைகிறது. நல்ல எண்ணங்களை தன்னம்பிக்கையோடு சிந்திப்பவன் வெற்றி பெறுகிறான். தன்னம்பிக்கை இல்லாத எண்ணம் தோல்வி அடைகிறது.

வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்

தொழிலிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு என்பது முக்கியத் தேவையாக இருக்கிறது. வாய்ப்பை

சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கும், வெற்றிக்கும் இடையே தொடர்பு இருக்கிறது.
டாடா, பிர்லா, அம்பானி, நாராயணமூர்த்தி, ஷிவ் நாடார் உள்ளிட்ட வெற்றிபெற்ற தொழில திபர்கள் எல்லாம் வாய்ப்பை

சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களே.
தன்னம்பிக்கை உள்ளவர்களே வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தன்னம்பிக்கை உள்ளவர்கள் கஷ்டங்களில் கூட வாய்ப்பை கண்டுணர்வார்கள். நம்பிக்கை இல்லாதவர்களோ

தன்னம்பிக்கையே துணை!

2020 ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாகும் என்று அப்துல் கலாம் சொன்னார். ஒரு நாடு பொருளாதார பலம், ராணுவ பலம், விஞ்ஞான ஆற்றல் பலம் இவற்றில் எல்லாம் முன்னிலையில் இருந்தால் அந்நாடு வல்லரசாவதற்கான தகுதியை அடைந்ததாக அர்த்தம். இந்த தகுதியை இந்தியா விரைவாக அடைய வேண்டுமெனில் மனித வள ஆற்றலை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும்.
நமது நாட்டில் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 65 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஆற்றல்களாக மாறும்போதும் இந்தியா தனது வல்லரசு கனவை அடைவது நிச்சயம். ஆனால் நமது இளைஞர்களிடம் சில குறைபாடுகளும் உள்ளன.

ஒவ்வொரு இளைஞனும் கனவு காண வேண்டும்-MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்

இது மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலம். மாணவர்கள் குறிப்பாக பிளஸ்டூ மாணவர்கள் எதிர்காலம் குறித்த யோசனைகளில் திளைத்திருப்பர். பலரது யோசனை உயர்கல்வி குறித்ததாக இருக்கும்.
படிப்பை தொடர முடியாத சூழலில் உள்ளவர்கள், எந்த வேலைக்கு செல்வது என்பது குறித்து யோசிப்பர். எது எப்படியிருப்பினும் இந்த இளைஞர்கள்தான் வருங்காலத்தை ஆளப்போகிறவர்கள். இவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்ன ஒரு விஷயத்தை இங்கு சொல்வது நல்ல தெளிவை ஏற்படுத்தும்.

தடைகளே சக்தியை உற்பத்தி செய்யும் இயந்திரம் MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்

ஒவ்வொரு மனிதனும் பல்வேறு சமயங்களில் பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறான். இதிலிருந்து மீண்டு வருவது என்பது அவரவர் மனநிலையை பொருத்த விஷயம். தன்னம்பிக்கை உடைய மனிதன் பிரச்சனையிலிருந்து எளிதாக மீண்டு விடுகிறான்.
ஒருவன் தன்மீது வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கையாகும். வாகனத்துக்கு எரிபொருள் எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு தெரியும். அதுபோல மனிதன் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு நம்பிக்கை அவசியம். நம்பிக்கை என்கிற எரிபொருள் உள்ளத்தில் இருக்கும்வரை நம்மை இயக்கி கொண்டே இருக்கும். நம்பிக்கையோடு இயங்கினால்தான் எந்த துறையிலும் சாதனை படைக்க முடியும்.

வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையா?

அதிர்ஷ்டம் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்று பலரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கருத்து மிகவும் அபத்தமானது. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று ஒற்றை வரியில் சொல்லிவிடுகிறோம்.
அந்த வெற்றிக்கு பின்னால் எவ்வளவோ வலிகளும், வேதனைகளும் மறைந்து இருப்பதை உணர மறுக்கிறோம்.
‘நீ எந்த அளவிற்கு கடினமாக உழைக்கிறாயோ அந்த அளவிற்கு உனக்கு அதிர்ஷ்டம் உண்டு’ என்று கேரி பிளேயர் என்ற அறிஞர் சொல்லி இருக்கிறார்.