மக்கள் நலன்

மக்கள் நலன்

ஒரு முறை டெல்லி மாநிலத்தில் பாஜக ஆட்சி கவிழ்வதற்கு கடுமையான வெங்காய விலை உயர்வு காரணமாக அமைந்தது. அந்த நிகழ்வை பாஜக இன்னும் மறக்கவில்லை.
அதனால்தான், வெங்காய விலை உயரும்போதெல்லாம் அதனை கட்டுப்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளை தற்போதைய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் விலையை கட்டுப்பாட்டில் வைக்க 25 ஆயிரம் டன் வெங்காயம் மற்றும் 15 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு இவற்றை கொள்முதல் செய்ய தற்போது மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ரூ.50 கோடி சுழல் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இந்த நடவடிக்கையை பாஜக மேற்கொள்வதற்கு முக்கிய காரணம் என்ன? எல்லாம் தேர்தல்தான்!