பாலிசி

வேலை இழப்புக்கு ஆளாவோருக்கு கை கொடுக்கும் நண்பன்... ‘ஜாப் லாஸ் பாலிசி’

இன்றைய பொருளாதார சூழலில், வேலை கொடுக்கும் தனியார் நிறுவனங்கள், தேவையில்லை என்றால் எந்த நேரத்திலும்
பணியாட்களை வேலையிலிருந்து தூக்கி எரியும். எனவே ஒரு பணியாளர், தான் செய்யும் வேலை நிலையானது என்று
சொல்லி விட முடியாது. பணித்திறன் குறைந்தாலோ அல்லது நிறுவனத்தின் நிதி நிலை சரியில்லாமல் போனாலோ வேலை
எந்த நேரத்திலும் பறிபோகலாம்.

வேலையை இழந்த பணியாளர், வங்கியில் கடன் பெற்றிருதால் அவரது பாடு திண்டாட்டம்தான். தனிநபர் கடன், வாகன கடன்,
வீட்டுக்கடன் போன்றவை பெரும்பாலான பணியாளர்கள் வாங்கும் கடன்களாகும்.