கிராம வங்கி

கிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..

கிராமப்புற பகுதிகளில் உள்ள கடன் தேவைகளை நிவர்த்தி செய்வதற் காகவும், இதன் மூலம் கிராமப்புற வேலை வாய்ப்புகளை அதிகப் படுத்துவதற்காகவும் உருவாக்கப் பட்டதே ‘மண்டல கிராம வங்கிகள்’.
இதற்காக 1976 ம் ஆண்டு, மண்டல வங்கிகள் சட்டம், அரசால் இயற்றப்பட்டது. வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை விட இந்த வங்கிகள் சிறந்து விளங்கும் என்று நரசிம்மன் குழு பரிந்துரை செய்ததின் அடிப்படையில் ‘மண்டல கிராம வங்கிகள்’. நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. வங்கித் துறையில் இது ஒரு சாதனை நிகழ்வாக கருதப்படுகிறது.