Mar 2015

தொழில்முனைவோர் கடைபிடிக்க வேண்டிய முக்கிய ஆலோசனைகள்

ஒரு தொழில்முனைவோர் ஒரு தொழிலை தொடங்க நினைத்தவுடன் தொடங்குவது சிறந்தது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.தொடங்குவற்கான நேரம் வரவில்லை என்று சொல்லி தாமதித்தால் தொழிலில் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்கள்.
தொழிலில் அவ்வப்போது மந்தநிலை வரக்கூடும். இத்தகைய சூழலில், சில சோதனை முயற்சிகளைச் செய்ய வேண்டும். இதைச் செய்யத் தயங்க கூடாது. தயங்கினால் முடிவெடுக்கும் திறனும், தன்னம்பிக்கையும் குறையும்.

மத்திய நிதிக் குழு பரிந்துரை: பாதிப்புக்குள்ளாகும் தமிழகம்!

மத்திய அரசின் வரி வருவாயை, மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிப்பதை வரையறுப்பதற்காக, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி.ரெட்டி தலைமையில் நியமிக்கப்பட்ட மத்திய நிதிக் குழு, தனது அறிக்கையில், மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய நிதி சம்பந்தமாக புதிய பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் அம்சங்கள் பின்வருமாறு:
மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதால் அவை சுயமாக செயல்பட வழியேற்படும். மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்த இத்தகைய கூடுதல் நிதி உதவியாக இருக்கும்.

பாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்

பங்குச்சந்தை, மியுச்சுவல் பண்ட்ஸ், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்யும் போக்கு இந்திய மக்களிடம் அதிகரித்து வந்தாலும், வைப்பு நிதி என்று சொல்லப்படுகிற பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்களே இந்தியாவில் அதிகம்.
ஏனெனில் இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். பாதுகாப்பும், உறுதியாக கிடைக்கும் வட்டி வருவாயும் இதனை நோக்கி மக்களை ஈர்க்கிறது. பங்குச்சந்தையில் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டம் சிறந்தது.

Pages