அவசிய தேவையாகிவிட்ட ஆதார் அட்டை..

இந்திய மக்கள் அனைவருக்கும் அடையாள அட்டையை வழங்குவதற்காக, ஆதார் அட்டை என்கிற மிகப்பெரிய திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. தற்போதைய பாஜக அரசிலும் அந்த திட்டம் தொடர்கிறது.
இந்தியா முழுவதும் சுமார் 80 சதவீத மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ளோருக்கு இன்னும் 6 மாதத்தில் ஆதார் அட்டை வழங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் அட்டையில் ஒவ்வொரு வருக்கும் தனி எண் வழங்கப்படுகிறது. பயோமெட்ரிக் அடிப்படையில் கைவிரல் ரேகை, கண் கருவிழியின் ரேகை, முகம் போன்ற பல தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் அட்டையை போலியாக உருவாக்க முடியாது.
ஆதார் அட்டையில் குறிப்பிடப் பட்டிருக்கும் எண், உலகளாவிய எண்ணாகும். எனவே, சென்ட்ரல் யூனிக் ஐடென்டிஃபிகேஷன் டேட்டாபேஸை தொடர்பு கொண்டால் குறிப்பிட்ட நபரின் தகவல்களை தெரிந்துகொள்ளமுடியும்.
இது சேவை மையங்களுக்கும், வங்கி நிறுவனங்களுக்கும், ஏஜென்சிகளுக்கும் மிகுந்த பயனளிப்பதாக அமையும்.
ஒவ்வொரு ஆதார் எண்னும் ஹிமிஞி-யுடன் இணைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வங்கி கணக்கை பாதுகாப்பான முறையில் பராமரித்து பண பரிமாற்றம் செய்ய முடியும். இதனால் வங்கிச் சேவையின் தரம் மேம்படுகிறது.
ஆதார் அட்டை என்பது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அடையாள ஆவணம். இந்த அட்டையின் மூலம் ஒரு பயனாளி தனது உரிமைகள், சேவைகள் பெறுதல் குறித்த தகவல்களை செல்போன் வழியாகவே பெற்றுக் கொள்ள முடியும்.

Issues: