Apr 2015

குறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்

தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு எழக்கூடும். அந்த எண்ணம் தோன்றியவுடன், பணத்திற்கு என்ன செய்வது என்ற அச்சமும் கூடவே எழும். இந்த அச்சத்தை முன்னிட்டு தொழில் தொடங்காமல் சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் ஏராளம்.
சரியான சிந்தனை மற்றும் நுண்ணிய பார்வையை செலுத்தினால் குறைந்த முதலீட்டில் தேர்ந்தெடுக்க பல தொழில்கள் உள்ளன. குறைவான நேரமும், குறைவான உழைப்பும் இந்த தொழில்களுக்கு போதுமானவை. இத்தகைய தொழில்கள் பற்றி இங்கு காண்போம்.

வருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்!

காளானுக்கு இன்றைய நிலையில் மிகப்பெரும் மவுசு கூடியிருக்கிறது. ஸ்டார் ஓட்டல்களின் மெயின் மெனுவில்கூட காளான் உணவுகள் இடம் பிடிக்கிற அளவுக்கு அதன் மகத்துவம் பெருகியிருக்கிறது. அசைவம் சாப்பிடாத சைவ பிரியர்களுக்கு அசைவ சுவையைஅளிக்கும் அற்புதமான சைவ உணவாக காளான் இன்றைக்கு திகழ்கிறது.

நாக்கிற்கு நல்ல சுவையையும், உடலுக்கு நல்லசத்தையும் தரும் காளானில், வைட்டமின் சி மற்றும் டி அதிகளவில் உள்ளன. தாது வகைகளான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், காப்பர், பொட்டாசியம் போன்ற சத்துகளும் இதில் இருக்கின்றன.

சுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி தேடிக்கொண்டிருப்பவராக இல்லாமல், சுயதொழில் புரிபவராக மாறவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் மாவட்ட தொழில் மையங்கள்.

இந்த மையங்களின் உதவி யால் சுயதொழில் தொடங்கி மு ன்னேறியவ ர்கள் த மி ழ க த் தி ல் ஏராளம். சிறும ற் று ம் கு று தொழிற் சாலைகள் தமிழகத்தில் ஏராளமாக பெருகி இருப்பதற்கு மாவட்ட தொழில் மையங்களும் முக்கிய காரணம்.

இராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பணிவாய்ப்பு

ந்திய இராணுவத்திற்கு சொந்தமான தளவாட பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள, இராணுவ வாகனங்கள் மற்றும் அது சார்ந்த துணைப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையும் ஒன்று.

சரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி

டந்த மார்ச் 23ம் தேதி அன்று சிங்கப்பூரே மீளாத்துயரில் ஆழ்ந்தது. காரணம் சிங்கப்பூரின் சிற்பி எனப் புகழப்படும் லீ குவான் யூ
அவரது 91வது வயதில் இம்மண்ணுலகை விட்டு சென்றுவிட்டார். இந்த சிற்பிக்கு நமது பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

லீ குவான் யூ 30 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு ஒரு சிறிய தீவாகத்தான் சிங்கப்பூர் இருந்தது.
தனது தனிச்சிறப்பு மிக்க ஆட்சியின் மூலம் சிங்கப்பூரை ஒரு மாபெரும் பொருளாதார சக்தி மிக்க நாடாக மாற்றினார்.

அந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உயர்வு... காப்பீட்டு துறை வளர்ச்சி காணுமா?

தனிநபர் சேமிப்பில் உலக அளவில் இந்தியாதான், முதன்மையான நாடு. வங்கி, தங்கம், நிலம் போன்றவற்றில் சேமிப்பு
செய்யும் மக்கள் காப்பீட்டிலும் பணத்தை சேமிக்கின்றனர்.

காப்பீட்டுத் துறையைப் பொறுத்தவரை தனியார் நிறுவனங்களைவிட பொதுத்துறை நிறுவனமான எல்ஐசிதான் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ளது.

இந்நிலையில் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக மத்தியஅரசால் உயர்த்தப்
பட்டுள்ளது.

விற்பனையில் சக்கைப்போடு போடும் 4ஜி செல்போன்

4ஜி செல்போன் விற்பனையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களாக திகழ்வது சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள்தான்.
இந்த செல்போன் இந்தியாவில் அறிமுகமானபோதும் இந்திய அளவில் விற்பனையில் இந்நிறுவனங்களே முன்னணியில் இருந்து வந்தன. ஆனால் இப்போது சீனாவின் ஜியோமி 4ஜி செல்போன்கள் அதிகம் விற்பனையாகி வருகின்றன.

சாம்சங் மற்றும் ஆப்பிள் செல்போன்களை விடவும் ஜியோமி 4ஜி செல்போன்கள் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன.
குறிப்பாக சீனாவில் சாம்சங் செல்போன் விற்பனை 60 சதவீதம் அளவு குறைந்ததற்கு முக்கிய காரணம் ஜியோமி செல்போன் தான்.

வேலை இழப்புக்கு ஆளாவோருக்கு கை கொடுக்கும் நண்பன்... ‘ஜாப் லாஸ் பாலிசி’

இன்றைய பொருளாதார சூழலில், வேலை கொடுக்கும் தனியார் நிறுவனங்கள், தேவையில்லை என்றால் எந்த நேரத்திலும்
பணியாட்களை வேலையிலிருந்து தூக்கி எரியும். எனவே ஒரு பணியாளர், தான் செய்யும் வேலை நிலையானது என்று
சொல்லி விட முடியாது. பணித்திறன் குறைந்தாலோ அல்லது நிறுவனத்தின் நிதி நிலை சரியில்லாமல் போனாலோ வேலை
எந்த நேரத்திலும் பறிபோகலாம்.

வேலையை இழந்த பணியாளர், வங்கியில் கடன் பெற்றிருதால் அவரது பாடு திண்டாட்டம்தான். தனிநபர் கடன், வாகன கடன்,
வீட்டுக்கடன் போன்றவை பெரும்பாலான பணியாளர்கள் வாங்கும் கடன்களாகும்.

மாட்டிறைச்சிக்கு தடை! பொருளாதார பாதிப்புகள் ஏற்படுமா?

மகாராஷ்டிரம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம்
அபராதமும் விதிக்கப்படும் என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இப்புதிய சட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழப்பார்க என்றும், பிற இறைச்சி விலைகஷீமீ உயரும் என்றும்,
மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதேபோல பல அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் இச்சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

பயன்படுத்தப்படாத 20 ஆயிரம் டன் தங்கம்... வருமானம் தரும் தங்க டெபாசிட் திட்டம்... முதலீடு செய்ய முன்வருவார்களா மக்கள்?

மக்களுக்கு அணிகலனாகவும் , சேமிப்பாகவும் பயன்படும் ஒரு பொருள் தங்கம். இது நாட்டின் பொருளாதார பலத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த த ங் க த் தி ன் மூ ல ம் , இ ந் தி ய பொருளாதாரத்துக்கு எழுச்சி கிடைக்க இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விதை தூவப்பட்டுள்ளது. அதுதான் தங்க டெபாசிட் திட்டம்.

Pages