சிங்கப்பூர் செய்தி

25 வயதை கடந்த ஒவ்வொருவருக்கும் ரூ 25 ஆயிரம் இலவசம்! இங்கல்ல.... சிங்கப்பூரில்

சிங்கப்பூர் மக்கள் அவர்களது திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் 25 வயதை கடந்த ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் உதவித் தொகையாக அந்நாட்டு அரசு 500 வெள்ளி[25 ஆயிரம் ரூபாய்] ஒதுக்கியுள்ளது. இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தை சிங்கப்பூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு நாட்டினரும் வியந்து போற்றுகிறார்கள்.
சிங்கப்பூர் போல, தனது குடிமக்களின் திறன் வளர்ச்சிக்கு இப்படிப்பட்ட திட்டத்தை வேறு எந்த நாடும் செய்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ என அழைக்கப்படும் இந்தத் திட்டம் எதிர்காலத் திறன்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக அந்நாட்டினர் தெரிவிக்கின்றனர்.