மின்சாரம்

எல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்

வீடுகள் மற்றும் தெரு விளக்குகளுக்கு எல்இடி விளக்குகளை பொறுத்துவதன் மூலம் வரும் 2019-ம் ஆண்டிற்குள்  10ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க மத்தியஅரசு திட்டமிட்டு வருவதாக சமீபத்தில் மின்சாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.  
 
இது இந்தியாவின் ஒட்டு மொத்த நுகர்வில் 10 சதவீதமாகும். இதன் மூலம் 200 கோடி டாலர் சேமிக்க முடியும் என்று மத்தியஅரசு எண்ணுகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

மின்சாரத்தையும், வேலைவாய்ப்பையும் வழங்கும் உடன்குடி அனல்மின் நிலையம்

தமிழ்நாடு மின் வாரியம், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது.இத்திட்டம் 9,000 கோடி ரூபாய் செலவில் அமைய இருக்கிறது. இந்த திட்டத்திற்கு, தமிழக அரசு, 2012 பிப்ரவரியில் அனுமதி வழங்கியது.
நிலம் கையகப் படுத்தும் பணி, சுற்றுச்சூழல்துறையின் அனுமதி வாங்கும் பணி, டெண்டர் விடும் பணி போன்றவை நிறைவுபெற்று மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுமின் நிலையம்

தமிழகம் தனது மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் ஏற்பட்டிருக்கிறது.
இன்னும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் கிடைக்க இருக்கிறது என்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய செய்தியாகும். இது திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஒரு அரும் பெரும் செய்தி.
சுமார் 20,000 கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வர உள்ளது. கூடங்குளம் மின் நிலையம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழகத்திற்கு கிடைக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.