விவசாய பிரச்சனை

பயிர்க்காப்பீடு செய்ய முன் வராத விவசாயிகள்...காரணம் என்ன?

இந்திய மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி  செய்வதுடன், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்குவது விவசாயம். இந்த விவசாயத்தை பாதிக்கக்கூடிய காரணிகளாக திகழ்வது பருவ மாற்றமும் விலை மாற்றமும் ஆகும்.
  மழை பொழிந்து விளைச்சல் அதிகமானால் பொதுமக்களுக்கு நன்மையாக இருக்கிறது. அதேசமயத்தில் அது பெரும்பாலும்  விவசாயிகளுக்கு நன்மையாக இருப்பதில்லை.
குறிப்பிட்ட பொருள் சந்தையில் குவிந்தால் அப்பொருள் மிக குறைவான விலைக்கே வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.