வானியல் துறை

உலகின் கவனத்தை ஈர்க்கும் குலசேகரன் பட்டினம்

இந்திய வானியல் துறையில் ‘’இஸ்ரோ’’ வின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் திட்டம் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன் பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைய இருக்கிறது. ஏற்கெனவே ஸ்ரீஹரிகோட்டாவில் 2 ஏவுதளங்கள் உள்ளன. குலசேகரன்பட்டனத்தில் அமையும் போது அது 2வது ராக்கெட் ஏவுதள மையமாகவும் 3வது ராக்கெட் ஏவுதளமாகவும் இருக்கும்.