அந்நிய முதலீடு

அந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உயர்வு... காப்பீட்டு துறை வளர்ச்சி காணுமா?

தனிநபர் சேமிப்பில் உலக அளவில் இந்தியாதான், முதன்மையான நாடு. வங்கி, தங்கம், நிலம் போன்றவற்றில் சேமிப்பு
செய்யும் மக்கள் காப்பீட்டிலும் பணத்தை சேமிக்கின்றனர்.

காப்பீட்டுத் துறையைப் பொறுத்தவரை தனியார் நிறுவனங்களைவிட பொதுத்துறை நிறுவனமான எல்ஐசிதான் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ளது.

இந்நிலையில் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக மத்தியஅரசால் உயர்த்தப்
பட்டுள்ளது.