தொழில் முனைவோர்

தொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாததன் காரணமாக வாழ்நாள் முழுவதும் சம்பளத்திற்கு பணி செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

இன்னும் சிலருக்கு முறையான திட்டங்கள் இருக்கும். ஆனால் பணம் இருக்காது. நம்மை நம்பி யார் பணம் தரப்போகிறார்கள் என்று எண்ணி திட்டத்தையே கைவிடுபவர்கள் பலர். இவர்களுக்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கமாக இருப்பதுதான் அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமாகும்.

தொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’

இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இருக்கின்றனர். இந்திய இளைஞர்களுக்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தால், அவர்கள் உலகில் எப்பகுதியிலும்  பணியாற்றும் திறனைப்  பெறுவர். எனவே, திறன் மேம்பாட்டுத் துறையில் இந்தியாவுக்கு ஜப்பான் உதவ வேண்டும்’’ என பிரதமர் மோடி ஜப்பான் நாட்டுக்கு சென்றபோது வேண்டுகோள் விடுத்ததை நாம் அறிவோம்.
 
ஜப்பான் நமக்கு நட்புநாடு. அந்நாடு இந்த விசயத்தில் நமக்கு உதவக்கூடும். அல்லது உதவாமலும் இருக்கலாம்.

6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்!

கார்பரேட் நிறுவனங்களின் அபரிமித வளர்ச்சியைப்பற்றி நாம் இன்றைக்கு வியந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.
எவ்வளவுதான் நாம் வியந்து பேசினாலும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் குறு சிறு தொழில் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில், கார்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவே.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு 1954ல் ‘குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம்’ என்ற அமைப்பைத் தொடங்கியது.

தொழில்முனைவோர் கடைபிடிக்க வேண்டிய முக்கிய ஆலோசனைகள்

ஒரு தொழில்முனைவோர் ஒரு தொழிலை தொடங்க நினைத்தவுடன் தொடங்குவது சிறந்தது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.தொடங்குவற்கான நேரம் வரவில்லை என்று சொல்லி தாமதித்தால் தொழிலில் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்கள்.
தொழிலில் அவ்வப்போது மந்தநிலை வரக்கூடும். இத்தகைய சூழலில், சில சோதனை முயற்சிகளைச் செய்ய வேண்டும். இதைச் செய்யத் தயங்க கூடாது. தயங்கினால் முடிவெடுக்கும் திறனும், தன்னம்பிக்கையும் குறையும்.

புதிதாக தொழில் தொடங்க எளிய வழி!

இன்றைக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் எங்கு பார்த்தாலும் வெளிநாட்டு உணவு கடைகளை பார்க்கிறோம். உலக அளவில் முன்னணி பிரைடு சிக்கன் பிராண்ட் நம்ம ஊரு மதுரையிலும் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமானது?
இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு தங்களுக்கான நுகர்வோர்களை நமது நாட்டில் பிடிப்பது எப்படி?
ஒரு மளிகைக் கடை நடத்தும் அண்ணாச்சியை, இன்னொரு கடை திறக்க வேண்டியது தானே என்று கேட்டால், ‘ஐயோ.. ஒரு கடையை நடத்துவதற்கே பெரும் பாடாய் இருக்கிறது, இன்னொரு கடை எதற்கு?’ என்று கேட்பார்.