மியூச்சுவல் பண்டு

குறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு

நம் மக்கள் வங்கி, தங்கம் போன்றவற்றில் அதிக முதலீட்டை மேற்கொள்வது சரியான அணுகுமுறை இல்லை என்றே சொல்லவேண்டும்.
ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்டு போன்றவற்றில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனமான முடிவாகும். மியூச்சுவல் ஃபண்டுகளில் மக்கள் அதிகளவில் முதலீடு செய்யவேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஒரு முதலீட்டு நிறுவனம் பொதுமக்களிட மிருந்து நிதியை திரட்டி, முதலீடு செய்து, கிடைக்கும் லாபத்தின் ஒரு சிறு பகுதியை, தான் எடுத்துக்கொண்டு மீதியை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதுதான் மியூச்சுவல் ஃபண்ட்டின் அடிப்படை.

மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதில் மக்களின் ஆர்வம் அதிகரிக்க காரணம் என்ன?

மியூச்சுவல் பண்டுகளில் செய்யப்படும் முதலீட்டு பணம் பெரும்பாலும் வங்கிப் பங்குகளிலேயே முதலீடு செய்யப்படுகிறது. தற்போது சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் பண்டுகள் முதலீடு செய்திருக்கின்றன.