கைத்தறி தொழில்

‘பாரம்பரியம் மிக்க பவானி ஜமக்காள தொழில் பாதுகாக்கப்பட வேண்டும்’

பழனி என்றால் பஞ்சாமிர்தம் ஞாபகத்திற்கு வருவதைப்போல பவானி என்ற பெயரைக் கேட்டாலே ஜமக்காளம் தான் ஞாபகத்திற்கு வரும். 1947 ம் ஆண்டே ஜமக்காளத்திற்கான காப்புரிமையை பவானி பெற்று விட்டது. ஜமக்காளத்தை தமிழில் தரை விரிப்பு என அழைக்கிறார்கள்.
தமிழகத்தை கடந்து ஆந்திரா, கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பவானி ஜமக்காளம் பிரபலம். மேலும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.