வேளாண் உற்பத்தி

உற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை

காவிரி டெல்டா மாவட்டங் களான தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட விவசாயிகள் பெரும்பாலும் நெல் (சம்பா & குறுவை) கரும்பு போன்ற அதிக தண்ணீர் தேவைப்பாடு மிகுந்த பயிர்களை சார்ந்தே வாழ்கின்றனர். இத்தகைய பயிர்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குவது காவிரி ஆறுதான்.
 

வேளாண் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதில் இந்தியாவுக்கு முட்டுகட்டை

120 கோடி மக்கள் தொகை கொண்ட நமது இந்தியா உணவு உற்பத்தியில் இன்னும் தன்னிறைவை அடைய வேண்டி இருக்கிறது. பல உணவு பொருட்களை நாம் இன்னும் இறக்குமதி செய்து கொண்டுதான் இருக்கிறோம். வேளாண்மையில் உற்பத்தி பெருகாமைக்கு தண்ணீர் பிரச்சனை ஒரு முக்கிய காரணம். மத்திய அரசு அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரை சீராக விநியோகம் செய்ய தவறி விட்டது.
மாநிலங்களுக்கான நதிநீர் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் காரணமாக மத்திய அரசு பொறுப்பான முறையில் நடந்து கொள்ளாததே இப்பிரச்சனை நீடிக்க காரணம்.