வங்கி

வங்கிகளின் முதுகெலும்பு வாடிக்கையாளர்களே...

வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே உள்ள உறவுகள் சமீபகாலமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளதை பல வங்கிகளில் காண்கிறோம்.
இப்பொழுது உள்ள நடைமுறை வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் நாம் வங்கிச் சேவையை சார்ந்தே இருக்கிறோம். சொல்லப்போனால் வங்கித்துறை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாகத் திகழ்கிறது.
இந்நிலையில் வங்கி நிர்வாகமும் உயர்மட்டக் குழுவை நியமனம் செய்து வாடிக்கையாளர்களின் குறைகளை துரிதமாக சரிசெய்வது குறித்து ஆராய்ந்து வருகின்றன.
வங்கிச் சேவையானது ஆட்டோ ஓட்டுனர் முதல் மாத பென்சன் பெறுபவர்கள் வரை பல வகைப்பட்டது.

வரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா?

இந்தியாவில் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தாலும், பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இன்னும் வங்கிச் சேவை கிடைக்காத நிலைதான் இருந்து வருகிறது.
இதனை உணர்ந்த மத்திய அரசு 2013ம் ஆண்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் வங்கிச் சேவையை அளிப்பதற்கான ஆலோசனையை வழங்குவதற்கு நசிகேத் மோர் என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
இந்த குழுவின் ஆலோசனைபடி, பேமென்ட் பேங்க் மற்றும் சிறிய வங்கி என்ற இரண்டு வகை வங்கிகளை உருவாக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.