தொழிற்கல்வி

தொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’

கல்லாத பேரை எல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில்தான் இன்பம் என் தோழா....

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த பாடலை எழுதிய காலகட்டத்தில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் மிகவும்குறைவாக  இருந்தது. அதேபோல் தொழிற்கல்வி கற்றவர்களின் சதவீதமும் மிக்குறைவாக இருந்தது. ஆனால் இன்றைக்கு ஓரளவு நிலைமை மாறியிருக்கிறது. இம்மாற்றத்துக்கு காரணம் அவரைப் போன்ற சமூக ஆர்வலர்களும், சமூக சிந்தனையாளர்களும், மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான்.