வளர்ச்சி திட்டம்

பழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை! விரைவில் அமுலாகும் புதிய திட்டம்

இந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு அரசுக்கும், மக்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது. வாகனங்களில் இருந்து வெளி வரும் புகை ஏற்படுத்தும் மாசின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

பெருநகரங்களில் வாகன எண்ணிக்கை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதாரணத்திற்கு சென்னை நகரத்தை எடுத்துக்கொள்வோம். நாள் ஒன்றுக்கு 1000 புதிய வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழைகின்றன.

மாநகரங்களின் பிரச்சனையை தீர்க்க உதவும் ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சிறப்பு நகரங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. புதிதாக உருவாக இருக்கும் இந்த ஹைடெக் நகரங்கள், நெருக்கடிகள் மிகுந்த மாநகரங்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மும்பை, -டில்லி போன்ற பெருநகரங்களுக்கு அருகாமையில் உள்ள சிறு நகரங்களை ஹைடெக் நகரங்களாக உருவாக்கும் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
இத்திட்டத்திற்கு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக் கிறது. இதில் 26 சதவீத நிதியை ஜப்பான் முதலீடு செய்யவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.