ஐடி துறை

ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஐடி நிறுவனங்கள்...அச்சத்தில் உறையும் பணியாளர்கள்!

ஐடி துறையில் இந்தியா முழுவதும் சுமார் 32 லட்சம் ஊழியர்கள் பணி புரிகின்றனர்.இன்றைய நிலையில் அனைத்து ஊழியர்களுமே அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள்.எந்த நேரத்தில் வேலை பறிபோகுமோ என்ற கவலை இவர்களை வாட்டி வதைக்கிறது. ஏனெனில் ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
ஐடி துறையில் மிகப் பழமையான நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் நிறுவனம், இந்தியாவில் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை 1.65 லட்சம் என்ற அளவில் இருந்து 1 லட்சமாக குறைக்க முடிவு செய்துள்ளது.