முதலீட்டாளர் மாநாடு

முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக மாறியுள்ள தமிழகம்!

உலக அளவில் முதலீடுகளை ஈர்க்க, சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை வருகிற மே மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழக அரசு சென்னையில் நடத்த உள்ளது.
இதன் மூலம், மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கும் முடியும் என தமிழக அரசு கருதுகிறது.
இம்மாநாட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. சில முக்கிய விசயங்களை இம்மாநாட்டில் முதல்வர் குறிப்பிட்டார்.