கிராஜுவிட்டி

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் கிராஜுவிட்டி தொகை கிடைக்க வழிவகை செய்யுமா அரசு?

பணி ஓய்வுத் தொகை என அழைக்கப்படும் கிராஜுவிட்டி என்பது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று. இது வழங்கப்படுவதன் முக்கியநோக்கம், பணியாற்றும் ஊழியர்களின் சேவைகளை கௌரவிப்பதே.
கிராஜுவிட்டி தொகை வழங்குவதற்கான விதிமுறைகள் என்ன?
நிறுவனத்தின் ஊழியர் பட்டியலில் குறைந்த பட்சம் 10 நபர்களாவது இருக்க வேண்டும்.
இப்பட்டியலில் இடம்பெறுவோர் தற்காலிக பணியாளர்களாக இருக்கக்கூடாது.
அனைவரும் நிரந்தர ஊழியர்களாக இருக்க வேண்டும்
குறிப்பிட்ட நிறுவனத்தில் ஒரு நபர் குறைந்தது 5 வருடங்களாவது பணியாற்றியிருக்க வேண்டும்.