வெற்றி சிந்தனை

நேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி

இந்தியர்கள் ‘பஞ்சுவாலிட்டி’யை கடைப் பிடிக்காதவர்கள் என்று வெளிநாட்டினர் பொதுவாக சொல்வார்கள். இந்தி யாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருப்பவர்கள் கூட நேரத்தை முறையாக கடைப்பிடிப்பதில்லை என்றும், எதிலும் தாமதமாகவே செயல்படுகிறார்கள் என்றும் வெளிநாட்டுக்காரர்கள் கூறுகிறார்கள். குறித்த நேரத்தில் செயல்படாமல் தாமதமாக செயல்படுதல் என்பது நமது மக்களுக்கு ரத்தத்தில் ஊறிப் போன விஷயமாக இருக்கிறது.

 ஜப்பானில் புல்லட் ரயில் 10 மணி, 15 நிமிடம், 20 நொடி என்று நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அந்த நொடியில் ரயில் வந்து நிற்கும். 1 நொடி தாமதமானால் கூட ரயிலைப் பயணிகள் பிடிக்க முடியாது.

அனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது?

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்
என்றார் வள்ளுவர்.
விருப்பப்பட்டதை  வாழ்க்கையில் அடைவதுதான் வெற்றியாகும்.

மாற்றம் காண மனோபாவத்தை மாற்று...

மனிதன் தனது மாபெரும் அறிவாற்றலைக் கொண்டு எவ்வளவோ நவீனங்களை உருவாக்கி விட்டான். இன்னும் சில வருடங்களில் செவ்வாய் கிரகத்துக்கு சுற்றுலாப் பயணம் செய்யும் அளவுக்கு மனிதன் முன்னேறி விட்டான். வளர்ச்சி .... வளர்ச்சி.... என்று மனிதன் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறான். ஆனால் மகிழ்ச்சியைத்தான் தொலைத்து விட்டான். திருப்தி கொள்ளும் மனப்பான்மையை பெரும்பாலும் இழந்து விட்டான் என்றே சொல்லலாம்.