July 2015

நிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் 3‘சி’ கோட்பாடு

ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான நிறுவனங்கள் தோன்றினாலும் சில நிறுவனங்கள் மட்டுமே தொழிற்துறையில் தொடர்ந்து இயங்குகின்றன.
 நட்டம், இயக்குனர் குழு சண்டை, தொழிலாளர்கள் பிரச்சனை, மாறிவரும் சூழலை புரிந்து கொள்ளாமை, போட்டியை எதிர்கொள்ள முடியாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான நிறுவனங்கள் மெல்ல மெல்ல மறைகின்றன.

எல்இடி விளக்குகளை பொறுத்தி மின்சாரத்தை சேமிக்க திட்டம்

வீடுகள் மற்றும் தெரு விளக்குகளுக்கு எல்இடி விளக்குகளை பொறுத்துவதன் மூலம் வரும் 2019-ம் ஆண்டிற்குள்  10ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க மத்தியஅரசு திட்டமிட்டு வருவதாக சமீபத்தில் மின்சாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.  
 
இது இந்தியாவின் ஒட்டு மொத்த நுகர்வில் 10 சதவீதமாகும். இதன் மூலம் 200 கோடி டாலர் சேமிக்க முடியும் என்று மத்தியஅரசு எண்ணுகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

தொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’

இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இருக்கின்றனர். இந்திய இளைஞர்களுக்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தால், அவர்கள் உலகில் எப்பகுதியிலும்  பணியாற்றும் திறனைப்  பெறுவர். எனவே, திறன் மேம்பாட்டுத் துறையில் இந்தியாவுக்கு ஜப்பான் உதவ வேண்டும்’’ என பிரதமர் மோடி ஜப்பான் நாட்டுக்கு சென்றபோது வேண்டுகோள் விடுத்ததை நாம் அறிவோம்.
 
ஜப்பான் நமக்கு நட்புநாடு. அந்நாடு இந்த விசயத்தில் நமக்கு உதவக்கூடும். அல்லது உதவாமலும் இருக்கலாம்.

தொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’

ஒரு தொழிலில் வெற்றி பெற பல்வேறு அம்சங்கள் தேவை. அறிவு, ஆற்றல் முதலீடு, தொழில் நிபுணர்கள் உள்ளிட்ட அம்சங்கள் தேவை. ஆனால் இவற்றை எல்லாம் ஒருங்கிணைக்க மனதிட்பம் வேண்டும். அதாவது மன உறுதி வேண்டும்.
 
எல்லாம் இருந்து மனதில் உறுதி இல்லை என்றால் வெற்றி சாத்தியமில்லை. தொழிலில் ஈடுபடும் ஒருவரின் மன உறுதியைப் பொறுத்தே அவரது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான் வள்ளுவர் ஒருவனின் மன திட்பமே வினை திட்பம் என்கிறார்.

நினைத்ததை அடைய வேண்டுமா?

எவ்வளவு மெதுவாக செல்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறீர்கள் என்பதே முக்கியம்’ என்றார் சீன தத்துவஞானி கன்பூசியஸ். இந்தக் கருத்துக்கு உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.
 தோஹா வங்கியின் தலைவராக இருப்பவர் டாக்டர் ஆர்.சீதாராமன். உலக அளவில் தோஹா வங்கியை வளர்த்தெடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர். தமிழரான இவரது சொந்த ஊர் கும்பகோணம் ஆகும்.
 

வறுமையை ஒழிக்குமா உணவுப் பாதுகாப்புச் சட்டம் ?

தனிமனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாரதி பாடினான்.  

அந்த காலகட்டத்தில் இந்தியா மாபெரும் வறுமையில் சிக்கி தவித்தது. அதற்கு காரணம் அன்றைய ஆங்கிலேய ஆட்சி. மக்களின் உழைப்பில் கிடைத்த வருமானத்தை, வரி என்ற பெயரில் சுரண்டியது ஆங்கிலேய ஆட்சி. அதனால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்து உணவுக்கே திண்டாடினார்கள். எனவேதான் மேற்சொன்ன வரியை பாரதி பாட நேர்ந்தது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் சென்று 65 ஆண்டுகள் கடந்து விட்டன. இவற்றில் பெரும்பாலான ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியே இந்தியாவை ஆண்டது. இடையில் ஜனதாவும், ஜனதாதளமும், பாரதீய ஜனதாவும் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தன.

முயற்சியே மூலதனம்!

தெய்வத்தார் ஆகாதெனினும் முயற்சி - தன் மெய்வருத்த கூலி தரும்
என்றார் வள்ளுவர்.
ஒரு தொழிலை தொடங்குவதற்கு அடிப்படை முதலீடே முயற்சிதான். பணம், சொத்து என்ப தெல்லாம் பிறகுதான். முயற்சியோடு ஆர்வ மும் இருந்தால் பணத்தை எப்படி திரட்டுவது என்ற வழி முறையை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
ஒரு தொழில் முனைவோர் தனக்கு நன்கு தெரிந்த தொழி லையே தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அதற்கான முதலீட்டை திரட்டுவது குறித்து சிந்திக்க வேண்டும்.

லாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்!

தற்போது எந்த ஒரு வணிக நடவடிக்கையும், உற்பத்தி துறையும் லாஜிஸ்டிக்கை மையமாக வைத்தே செயல்பட்டு வருகிறது. சரக்கு போக்குவரத்து துறையின் புதிய பரிணாம பெயர்தான் லாஜிஸ்டிக். 

வீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்!

கல்யாணம் பண்ணிப்பார்... வீட்டை கட்டிப்பார்... என்று நம் பெரியோர்கள் சொன்னார்கள். திருமணம் நடத்துவதும், வீடு கட்டுவதும் மிகவும் சிரமமானது என்னும் அர்த்தத்தை இந்த சொற்றொடர் நமக்கு உணர்த்துகிறது. சிரமப்பட்டு வீடு கட்டுபவர்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விசயங்கள் இருக்கின்றன. அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
 
கஷ்டப்பட்டு பணம் சேர்த்து கனவு இல்லத்தை கட்ட தொடங்கும் முன், குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி திட்டமிடுங்கள்.
பொருளாதார நிலவரத்தை மனதில் கொண்டு வீட்டுக்கு தேவையான வசதிகளை நிறைவேற்றும் விதமாக அந்த திட்டமிடுதல் அமைய வேண்டும்.

மாற்றுப்பாதையில் விரைவில் செயல்படுத்தப்படுமா சேது சமுத்திர திட்டம்?

சேது சமுத்திர திட்டம், மாற்றுப்பாதையில் செயல்படுத்தப் படும் என்று தற்போதைய பாஜக அரசு கூறி வருவதை பல தரப்பினரும் வரவேற்கிறார்கள்.
 
சேது சமுத்திர திட்டம் 150 ஆண்டு கால கனவு திட்டமாகும். சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்... சேதுவை மேடுறுட்டி வீதி சமைப்போம்....... என்று பாடினான் புரட்சி கவி பாரதி.

Pages