கர்மயோகம்

செய்யும் தொழிலை நேசிப்போம்...

‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். இந்த பழமொழியை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எந்தத் தொழிலைச் செய்தாலும், அதை நேசிக்க வேண்டும். உலகில் எந்த தொழிலும் தாழ்வான தொழில் அல்ல. தொழிலே செய்யாமல் சோம்பேறியாக சுற்றிக்கொண்டு இருப்பவன் தான் தாழ்வானவன்.
தொழில் செய்யாதவனை இந்த சமூகம் மதிப்பதில்லை. வேலை செய்பவர்களுக்குத் தான் சமூகம் மரியாதையை தருகிறது. அதிலும் அந்த தொழிலை நேசத்தோடு செய்பவர்களுக்கு கிடைக்கும் மரியாதை மிகவும் அதிகம்.
பகவத் கீதையில் கர்மயோகம் என்ற பகுதியில் கிருஷ்ணர் சொன்ன உபதேசம் மிகவும் புகழ் வாய்ந்தது.