கடன்

கடன்

நமக்கு பணதேவை எப்போது வரும் என்று சொல்ல முடியாது. எதிர்பாராத நிகழ்வுகள் நிகழும்போது திடீரென பணம் தேவைப்படும். அத்தகைய சூழ்நிலைகளில் உதவுபவை நாம் சேமித்து வைத்திருக்கும் பணம்தான். சேமிப்பு இல்லாதபோது வட்டிக்கு கடன் வாங்க நேரிடும். வங்கி அல்லாத பிற நபர்களிடம் கந்து வட்டிக்கு வாங்கி பணம் செலவு செய்தால் கடனாளியாவது நிச்சயம். சம்பாதிக்கும் பணத்தில் வட்டிக்கே பெரும்தொகை சென்று விடும். எனவே அவசர தேவைக்கு பணம் பெற கந்து வட்டியை நாடாமல் வேறு வழியை நாடுவதே சிறந்தது. வேறு வழிமுறைகள் என்னென்ன? பொதுவாக நமது இந்தியர்களிடம் கொஞ்சமாவது தங்க நகைகளோ அல்லது நாணயங்களோ இருக்கும்.