சமூகநிலை

பொருளாதாரம் வளர்வதற்கான ஆய்வுகள் தேவை..

இன்றைய கால சூழலில் முனைவர் பட்டம் (பி.எச்டி) பெறுவதற்காக பலரும் தேர்ந்தெடுக்கும் தலைப்பு இலக்கியம் சார்ந்ததாகவே இருக்கிறது. இலக்கிய வகைகளான கதை, கவிதை, சிறுகதை, நாவல் போன்றவை மக்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்கும், அறிவை விருத்தி செய்து கொள்வதற்கும் தேவைதான் என்றாலும், முனைவர் பட்டம் பெற நினைப்பவர்கள் அதை
ஆய்வு செய்வதால் சமுதாயத்திற்கு பெரும் பலன் ஒன்றும் கிட்டப்போவதில்லை.

உயர் கல்வியில் அந்நிய முதலீடு... வலுக்கும் எதிர்ப்பு...

உலக வர்த்தக அமைப்பின் சார்பில், சேவைக்கான பொது ஒப்பந்தத்தின்படி உயர் கல்வியில் வெளிநாட்டு கல்வி  நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உலக வர்த்த அமைப்பின் மாநாட்டில் ஒப்பந்தமாக நிறைவேற உள்ளது.

எனவேதான்  மத்தியஅரசு உயர்கல்வி துறையில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களையும், பல்கலைக்கழகங்களையும் அனுமதிக்க தீர்மானித்து,  இதற்கான வழிமுறைகளை வகுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.  மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இன்ஜினியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன்கள்!

தமிழகத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் பட்டதாரிகள் படித்து முடித்து விட்டு வெளியே வருகின்றனர். ரூ-.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை செலவு செய்து, கனவுகளோடு படித்து முடித்து விட்டு, வேலை கிடைக்காமல் வேலையில்லா பட்டதாரிகளாக திகழும் நிலை உருவாகி உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.