பொருளாதார முன்னேற்றம்

கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’

மிகவும் வறுமை நிலையிலுள்ள வர்களின் வறுமை நிலையை அகற்றுவதற்கு ஜெயலலிதாவின்  முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 2005ம் ஆண்டு, புதுவாழ்வு திட்டம் என்ற ஒரு திட்டம் துவக்கப்பட்டது. இது உலக வங்கியின் நிதி உதவியுடன் அப்போது துவக்கப் பட்டது. இத்திட்டம் தமிழகத்தின் 120 ஊராட்சி ஒன்றியங்களில் தொடங்கப் பட்டு சிறப்பாக செயல்பட்டது.  
அதை தொடர்ந்து வறுமை நிலையிலுள்ள ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதார நிலையை உயர்த்துவதற்கு தமிழகத்தின் ஏனைய 265 ஊராட்சி ஒன்றியங்களிலும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

பசுமைப் பொருளாதாரம்

பொருளாதார திட்டங்கள் நமது சுற்றுச்சூழலை பேணிக் காப்பதாகவும், பூமியின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதகவும் இருக்கவேண்டும். இவற்றின் அடிப்படையில் அமையும் பொருளாதாரம் தான் ‘பசுமைப் பொருளாதாரம்’.

இது ஏதோ நான்கு சுவர்களுக்குள் சிலர் உருவாக்கும் திட்டங்கள் அல்ல.. இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உளப்பூர்வமாக இணைந்து செயலாற்ற வேண்டிய திட்டங்கள்.எந்தெந்தத் துறைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று யுனைடெட் நேஷன்ஸ் 10 துறைகளைக் குறிப்பிடுகிறது:

                                                              கட்டுமான துறை

20 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டுவது சாத்தியமா?

இந்தியா 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதற்கு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுவருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
பிரதமரின் இந்த இலக்கு குறித்து பல்வேறு துறையினரும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். தற்போதைய நிலையில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு சுமார் 2 டிரில்லியன் டாலர். இதை 20 டிரில்லியன் டாலராக உயர வேண்டுமெனில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். அத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் கூறியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.