தொழிற்நுட்பம்

உற்பத்தி துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் 3டி பிரிண்டர்கள்

3டி பிரிண்டர் எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பம் இந்தியாவில் இப்போதுதான் பிரபலமாகி வருகிறது.
பிளாஸ்டிக், செராமிக் என தேவைக்கு தகுந்தார்போல டை-களை உருவாக்கும் பிரிண்டர்கள் இப்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.
இதனால் பாரம்பரியமாக டை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இத்தொழிற்நுட்பத்திற்கு மாற வாய்ப்புண்டு. அவர்கள் மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கும்.
அண்மையில் முடிவடைந்த டாவோஸ் உலக பொருளாதார பேரவை மாநாட்டில் கூட அடுத்தகட்ட புரட்சியை 3-டி பிரிண்டர் ஏற்படுத்த வல்லது என கணித்துள்ளனர்